மதுரை, ஜூலை 6- தமிழக அரசு அனைத்து ஓட்டு நர்களுக்கும் தனி நலவாரியம் அமைக்க வேண்டுமென வலி யுறுத்தி மதுரையில் உண்ணாவிர தப்போராட்டம் நடைபெற்றது. மதுரை மாட்டு தாவணி ஆம்னி பேருந்து நிலையத்தில் தமிழ் நாடு அனைத்து ஓட்டுநர் நலச் சங்க சார்பில் 100க்கு மேற்ப்பட்ட வர்கள் திங்களன்று உண்ணாவிர தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப் போது மாநிலச் செயலாளர் தங்கப்பாண்டி செய்தியாளர்களி டம் கூறியதாவது கொரோனாவால் அனை வரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.144 தடை உத்தரவால் நான்கு மாதங்க ளாக ஆம்னி பேருந்து ஒட்டுநர்கள் 56 ஆயிரம் பேர் தமிழகம் முழு வதும் வாகனங்கள் இயங்காத தால் வேலை வாய்ப்பின்றி பொரு ளாதர ரீதியாக பாதிக்கப்பட்டுள் ளர். எங்களுக்கு மாதம் 15 ஆயி ரம் வழங்க வேண்டும். அனைத்து ஓட்டுநர்களுக்கும் தனியாக நல வாரியம் அமைக்க வேண்டுமென் றார். தகவலறிந்து வந்த காவல் துறையினர் உண்ணாவிரதம் இரு ந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.