tamilnadu

img

பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான தங்கும் விடுதி வசதி செய்க!

கோயம்புத்தூர், மார்ச் 20- இடம்பெயர்ந்து வரும் பெண் தொழி லாளர்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு, விடுதிகள் அமைக்கப்பட வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இளம் பெண்கள் மாநில மாநாடு வலியுறுத்தி யுள்ளது. கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இளம் பெண்கள் மாநில  மாநாடு, மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக் தலைமையில் ஞாயிறன்று நடைபெற்றது. வாலிபர் சங்க மத்தியக்குழு உறுப்பினர் பிரியங்கா சங்கக் கொடியினை ஏற்றி வைத்தார். கோவை மாவட்டச் செயலாளர் ஆர்.அர்ஜூன் வரவேற்புரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஆனந்தி,  நிருபனா, சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டை துவக்கிவைத்து வாலிபர் சங்க மத்தியக்குழு உறுப்பினர் க்ரேஷ்மா அஜய் ஜோஸ்வா உரையாற்றினார். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கத்தின்  இணைச்செயலாளர் எம்.கிரிஜா வாழ்த்துரை யாற்றினார்.

இம்மாநாட்டில், இடம் பெயர்ந்து வரும் பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான தங்கும் விடுதிகளை அரசு உருவாக்க வேண்டும், நாடாளுமன்றத்தில் மகளிர்க்கு 33% இட ஒதுக்கீடு அளிக்க சட்டம் இயற்ற வேண்டும்; பள்ளி, கல்லூரி மற்றும் பெண்கள் பணிபுரியும் இடங் களில் சானிட்டரி  நாப்கின் இலவசமாக வழங்க வேண்டும்; பெண் ஒப்பந்த தொழிலாளர் களுக்கு மகப்பேறு விடுப்பு ஊதியத்துடன் கூடியதாக அளிக்க வேண்டும்; பள்ளி, கல்லூரி மற்றும் பணி இடங்களில் ஐசிசி மற்றும் விசாகா கமிட்டி அமைத்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்ட்டன. இம்மாநாட்டில், இளம் பெண்கள் மாநில அமைப்பாளராக (கன்வீனர்) எஸ்.பாரதி தேர்வு செய்யப்பட்டார். துணை அமைப்பா ளர்களாக பிரியங்கா, ஆனந்தி, நிருபனா, அபிராமி ஆகியோரும், 15 பேர் கொண்ட உபகுழுவும் தேர்வு செய்யப்பட்டனர். வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் நிறைவுரையாற்றினார். கோவை மாவட்டத் தலைவர் எம்.விவே கானந்தன் நன்றி கூறினார். 

முன்னதாக மாநாட்டை துவக்கிவைத்து  வாலிபர் சங்கத்தின் மத்தியக்குழு உறுப்பினர் க்ரேஷ்மா அஜய் ஜோஸ்வா பேசியதாவது: ஒன்றிய மோடி அரசு, அரசியல் சாசன  விதிமுறைகளை புறந்தள்ளி, வர்ணா சிரமம், மநுதர்மம் ஆகியவற்றை நடை முறைப்படுத்துகிற முயற்சியில் ஈடுபடு கிறது. மநுதர்மம் மனிதர்களிடையே பிரிவினைவாதத்தை மேலோங்கச்செய்து, ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும். இதன் விளைவு, பெண்களின் உரிமைகளை முழுவதுமாக பறித்துவிடும். பெண்களை குழந்தைபெறும் இயந்திரமாக வும் பணிவிடைசெய்யும் அடி மையாகவும் மட்டுமே வைத்துக் கொள்ளும். மாறாக நாம் ஜன நாயகம், சோசலிசம், மதச்சார்பின்மையை பின்பற்ற வலியுறுத்தி வருகிறோம். பெண்களின் மீது இழைக் கப்படும் பல்வேறு கொடுமை களுக்கு ஆட்சி யாளர்களின் நடைமுறைக் கொள்கைகளே காரணமாகும்.

அரசியல் பார்வை அவசியம்

கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு என அனைத்தும் தனியார்மயமானால், பண மின்றி எந்த தேவையும் நிறைவேறாது என்கிற சிந்தனையை மனித சமூகத்தில் உருவாக்கும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள பணத்தை நாடுகின்ற இளைஞர்கள், தவறான திசையை தேர்ந்தெடுப்பார்கள். இத்தோடு வரதட்சணை போன்ற கொடு மைகளும் தீவிரமாக அரங்கேறும். “சம வேலைக்கு, சம ஊதியம்” என்கிற கோரிக்கை யை நீண்ட நாட்களாக வலியுறுத்தி வரு கிறோம். தற்போது பாலின சமத்துவத்தை வலியுறுத்தி மாதர் சங்கம், வாலிபர் சங்கம் உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகள் பல இயக்கங்கள் நடத்துகிறோம். ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்று பாலினத்தவர்கள் என அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதே நம்முடைய இலக்காகும். இந்த இலக்கை அடைய வேண்டும் என்றால், பெண்களுக்கு அரசியல் பார்வை மிகவும் அவசியமானது.

அரசியல் தெளிவோடு சமூகத்தைப் பார்க்க வேண்டும். அன்றாட விலைவாசி உயர்வு, சுற்றுச்சூழல் பதிப்பு, வேலை வாய்ப்பு ஆகியவற்றில் அரசியல் உள்ளது.  அரசியலாக கேள்வி கேட்டால் மட்டுமே உரிமைகள் பாதுகாக்கப்படும். அதற்கு அரசியல் அறிவோடு, அமைப்பின் பல மும் அவசியமானது. கேரளத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவிகிதம் வாய்ப்பளிக்கப்படுகிறது. அனைத்து அதிகாரப் பொறுப்புகளையும் பெண்கள் வகிக்கின்றனர். கேரளத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் உறுப்பினர் பதிவு 50 லட்சத்தை தான்டி யுள்ளது. அதில் சரிபாதி 25 லட்சம் பெண்கள். முதலாளித்துவக் கட்சிகளின் ஆட்சி யாளர்கள் பெண்ணுரிமை அரசியலை விரும்பமாட்டார்கள். சோசலிசத்தை, கம்யூனிசத்தை வலியுறுத்துகிற, முன்னெடுக் கின்ற இடதுசாரி அரசியல் மட்டுமே பெண் உரிமைகளைப் பாதுகாக்கும்; இளைஞர்களின் வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் சுகாதாரத்தை பாதுகாக்கும்.  இவ்வாறு அவர் பேசினார்.