சென்னை, ஏப்.20- மாணவர் சங்க நிர்வாகியை தாக் கிய காமராஜ் கல்லூரி பேராசிரியர் களை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் வலி யுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் கோ.அரவிந்தசாமி, மாநிலச் செயலாளர் க.நிருபன் சக்கரவர்த்தி ஆகியோர் வெளியிட்ட அறிக்கை வருமாறு: இந்திய மாணவர் சங்கத்தின் தூத் துக்குடி மாவட்டக்குழு உறுப்பினரும், காமராஜ் கல்லூரி கிளை நிர்வாகியு மான நேசமணியை தரக்குறைவாக பேசி கடுமையாக தாக்கியுள்ள பேரா சிரியர்களை இந்திய மாணவர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
ஏப்ரல் 19 அன்று தூத்துக்குடி காம ராஜ் கல்லூரியில் தேர்வு நடந்துள்ளது. தேர்வு நடைபெற்ற வகுப்பறையின் கரும்பலகையில் ஏற்கனவே நடத்தப் பட்டிருந்த பாடத்தை அழிக்காமல் தேர்வை நடத்தியுள்ளது. கல்லூரியின் கவனமின்மையால் ஏற்பட்ட இக் குளறுபடிகளால் மாணவர்கள் தேர் வில் பார்த்து எழுதிவிட்டனர் என்றும் அதற்கு குறிப்பிட்ட சில மாணவர்கள் தான் காரணம் என்று கூறியும் உள் நோக்கத்துடன் இடை நீக்கம் செய் யப்போவதாக சம்பந்தப்பட்ட விஸ்காம் துறை பேராசிரியர்கள் மணிகண்ட னும், சுரேஷும் கூறியுள்ளனர். இதை அறிந்த கல்லூரியின் மாண வர் சங்க நிர்வாகியும் அதே வகுப்பை சார்ந்த மாணவருமான நேசமணி கல்லூரி நிர்வாகத்தின் தவறால் ஏற் பட்ட குளறுபடிக்கு மாணவர்கள் எப் படி பொறுப்பாக முடியும்? அவர்களை இடை நீக்கம் செய்யக்கூடாது என்று மாணவர்களுக்கு ஆதரவாக முறை யிட்டுள்ளார். நியாயமான இந்த முறை யீட்டை உள்வாங்கிக் கொள்ளாமல் கேள்வி எழுப்பிய மாணவர் நேசமணி யை சம்பந்தப்பட்ட இரண்டு பேராசிரி யர்களும் காலை 11:30 மணியளவில் பேராசிரியர் எனும் பொறுப்பிற்கே களங்கம் விளைவிக்கும் வகையில் தரக்குறைவாக பேசியது மட்டுமல்லா மல், அடித்து இழுத்துச்சென்று தனி அறையில் பூட்டி மிகக் கடுமையாக தாக்கியுள்ளனர். குறிப்பாக மாண வரை கீழே தள்ளி அவரின் மார்பில் ஏறி மிதித்துள்ளனர்.
வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்
வர் நேசமணியை சக மாணவர்கள் மீட்டு மதியம் 12 மணியளவில் தூத்துக் குடி அரசு பொது மருத்துவமனையில் சேர்ந்தனர். காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மாணவர்கள் ஏப்ரல் 20 அன்று கல்லூரியில் வகுப்பை புறக் கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் (DSP) தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி மாணவர் தரப்பின் நியாயத்தை அறிந்து புகார் மனுவை ஏற்றுள்ளார் (CSR). தற்போது காவல்துறையின் தலை மையில் விசாரணைக் குழு அமைக்கப் பட்டுள்ளது. கல்லூரியிலும் ஒழுங்கு நடவடிக்கைக்குழு சம்பந்தப்பட்ட பேரா சிரியர்களை விசாரிப்பதாக ஒப்பு கொண்டுள்ளது. ஒருவாரத்திற்குள் இப்பிரச்சனையில் நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் பாதிக்கப்பட்ட மாண வர் நேசமணிக்கு ஆதரவாகவும், நட வடிக்கை எடுக்காத கல்லூரி நிர்வாகம் மற்றும் காவல்துறையினை கண்டித் தும் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்துவோம். விசாரணை நடைபெறும் வரை சம்பந்தப்பட்ட பேராசிரியர் களை கல்லூரியிலிருந்து இடைநீக்கம் செய்ய வேண்டும்.
மேலும் இப்பிரச்சனையை மாண வர் விரோத நோக்கில் செய்தி வெளி யிட்டு ஊடக அறத்திற்கு எதிராக நடந்து கொண்டுள்ள பாலிமர் செய்தி சேன லின் பொறுப்பற்ற தன்மையையும், தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்டத் தில் தனியார் கல்வி நிலையங்களில் நடக்கும் அவலநிலை பற்றி பல புகார்கள் வந்துள்ள நிலையில் தனி யார் கல்வி நிலையங்களுக்கு ஆதர வாக செய்தி வெளியிட்டுள்ளதை வன் மையாகக் கண்டிக்கிறோம். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் இந்திய மாணவர் சங்கம் போன்ற சமூக பொறுப்புள்ள மாணவர் அமைப்பின் மீது மூன்றாம்தர மனநிலையோடு சேற்றைவாரி இறைக்கும் இத்தகைய செய்தி சேனல்களை வரக்கூடிய காலங்களில் மாணவர்களும், மக்க ளும் புறக்கணிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.