tamilnadu

பழ வியாபாரியை அலைக்கழிக்கும் தேர்தல் ஆணையம்

மதுரை, ஏப்.11-சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்தவர் சாலையோர பழ வியாபாரி சந்தியாகு. இவர் கடந்த 7- ஆம் தேதி மதுரைக்கு பழங்கள் கொள்முதல் செய்ய வந்துள்ளார். அப்போது பறக்கும் படையினர் மதுரை பாண்டிகோவில் சந்திப்பில் நடத்திய வாகனச் சோதனையில் சந்தியாகு உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த 77 ஆயிரத்து 100 ரூபாயை பறிமுதல் செய்தனர்,பின்னர் சந்தியாகு உரிய ஆவணங்களைஒப்படைத்தும் பணம் இதுவரை கிடைக்கவில்லை.பணத்தை திருப்பி வழங்காமல் பறக்கும் படை அதிகாரிகள் அலைக் கழித்து வருவதாக மதுரை மாவட்டதேர்தல் நடத்தும் அலுவலர் ச.நடராஜனிடம் வியாழனன்று புகார் தெரிவித்தார்.

;