மதுரை:
கடந்த எட்டாண்டுகளாக தமிழகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சிறுமிகள், சிறார்கள் மீதான அனைத்து வழக்குகளையும் நீதிமன்றம் தானாக முன்வந்து எடுத்து விசாரிக்கவேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.\
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள், நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வுமுன்பாக திங்களன்று இந்த முறையீட்டை முன்வைத்தார். தமிழகத்தில் தொடர்ச்சியாக சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. போக்சோ சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.அது முறையாக நடைமுறைப்படுத்தப்படாததே தொடர்ச்சியாக சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரிக்கக் காரணம்எனக் கருதப்படுகிறது. கடந்த எட்டாண்டுகளாக தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமிகள், சிறார்கள் மீதான அனைத்து வழக்குகளையும் நீதிமன்றம் தானாக முன்வந்து எடுத்து விசாரிக்க வேண்டும் என அவர் முறையிட்டார்.இதை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு ஏற்பதாக நீதிபதிகள் தெரிவித்துள் ளார்.