சென்னை,ஏப்.28- தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 1- ஆம் தேதி பள்ளிகள் திறக்கப் படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார். 2023 - 2024 ஆம் ஆண்டுக் கான பள்ளிக்கல்வித் துறையின் நாட்காட்டியை அமைச்சர் அன்பில் மகேஸ் வெள்ளியன்று (ஏப்.28) சென்னையில் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து செய்தி யாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,“ கோடைகால விடு முறை முடிந்து ஜூன் ஒன்றாம் தேதி 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும். 1 முதல் 5 ஆம் வகுப்பு மாண வர்களுக்கு ஜூன் 5 ஆம் தேதி பள்ளிகள் தொடங்கும்” என்றார். 2024 ஆம் ஆண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் மாதம் 18 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு தேர்வு மார்ச் மாதம் 19 ஆம் தேதியும், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 8 ஆம் தேதியும் தொடங்கும் எனவும் அவர் கூறினார்.
தேர்வு முடிவுகள் எப்படி வந்தாலும் மாணவர்கள் தன்னம்பிக்கையு டன் இருக்க வேண்டும். மதிப்பெண்கள் முக்கியம்தான். அதே நேரத் தில், உங்களுக்கான தனித் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். மதிப் பெண்கள் குறைவாகிவிட்டால் திறமை இல்லாத மாணவர்கள் என நீங்கள் கருதிவிடக்கூடாது. உங்கள் திறமைக்கான நாற் காலி உங்களுக்காக காத்திருக் கிறது என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அரசுப் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும், தனியார் பள்ளி மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ள தாகவும் சிஏஜிஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது, இது ஜன நாயக நாடு, மாணவர்கள் எந்தப் பள்ளியில் வேண்டு மானாலும் சேரலாம். அரசுப் பள்ளிக்கு முதல்வர் அளித்திருக் கக்கூடிய சலுகையைப் பார்த்து எங்களைத் தேடி மாணவர்கள் வரவேண்டும் என்ற உத்வேகத்தை பெறக் கூடிய அளவிற்குதான் இந்த சிஏஜி அறிக்கையை நான் அணுகுகிறேன். கடந்த ஆட்சி யில் பள்ளிக்கல்வித் துறையில் ஏற்பட்ட பின்னடைவுகளை சரிசெய்யும் நோக்கில் எங்கள் செயல்பாடுகள் இருக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.