சேலம் ஜூலை 17 - கல்வித் துறையில் பணிபுரிந்து வரும் அமைச்சு பணியாளர்களுக்கு பொது மாறு தல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு உடனடி யாக நடத்த வேண்டும். தொகுப்பூதிய முறை யில் பணிபுரிந்து வரும் அனைவருக்கும் கல்வித் திட்ட அலுவலக பணியாளர்கள் மற்றும் மாதிரி பள்ளிகளில் பணிபுரிந்து வரும் அலுவலக பணியாளர்கள் ஆகியோர்க ளுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண் டும். கல்வித்துறையில் அமல்படுத்தப்பட்டு வரும் 14 வகையான நலத்திட்டங்களை செம் மையாக நடத்துவதற்கு ஏதுவாக கூடுதல் பணியிடங்களை வழங்கிட வேண்டும். சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவ லர் முருகன் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர் களை தரைக்குறைவாக பேசி வரும் சூழல் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. சம் பந்தப்பட்ட கல்வி உயர் அதிகாரிகள் அவர் மீது உரிய விசாரணை நடத்தி ஊழியர்களை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி சங்கத்தின் மாவட்ட தலை வர் மா. ராம்குமார் தலைமையில் சேலம் நாட் டாமை கழக கட்டிடம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சங்கத்தின் மாநில தலைவர் ஆர். சேகர், மாவட்ட செயலாளர் கா.முத்து கும ரன், மாவட்ட பொருளாளர் சி.கோபிநாத் ஆகி யோர் விளக்க உரையாற்றினர். போராட் டத்தை வாழ்த்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங் கத்தின் மாவட்ட செயலாளர் சுரேஷ், அரசு மோட்டார் வண்டிகள் பராமரிப்பு நிறுவன தொழிற்சங்கத்தின் மாநில துணைத்தலை வர் முருகப்பெருமாள், தமிழ்நாடு அரசினர் தொழிற்பயிற்சி அலுவலர் சங்க மாநில பொரு ளாளர் திருநாவுக்கரசு உள்ளிட்ட சகோதர சங்க தலைவர்கள் வாழ்த்தி பேசினர்.முடி வில் பா.அண்ணாதுரை நன்றி கூறினார்.