கர்நாடகாவில் உள்ள 4 அணைகளில் இருந்து தான் நமக்கு தண்ணீர் வரவேண்டும். இதுவரை 4,047 கன அடி தண்ணீர்தான் மேட்டூருக்கு வந்துள்ளது. காவிரி விவகாரத்தை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமிக்கு அதிகம் தெரியாது. என்னால் முடிந்த அளவுக்கு நீண்ட நெடிய காவிரி பிரச்சனையைக் கையாண்டு வருகிறேன். கர்நாடகாவுக்கு உள்ள உரிமையை அவர்கள் கேட்கிறார்கள். தமிழகத்துக்கு உள்ள உரிமையை நாம் கேட்கிறோம். நீதிமன்றம் மூலமாக தீர்வு காணப்படும். இறுதி முடிவு உச்ச நீதிமன்றத்தின் கையில் தான் உள்ளது” என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் க. துரைமுருகன் தெரிவித்துள்ளார்.