tamilnadu

img

புதிய அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா பதவியேற்பு

சென்னை,மே 11- தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்ச ராக டி.ஆர்.பி.ராஜா பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலை யில் ஆளுநர் ஆர்.என்.ரவி, பதவிப் பிரமாண மும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். தமிழகத்தில்  திமுக அரசு கடந்த 2021 மே7 அன்று பொறுப்பேற்றது. கடந்த ஆண்டில் அமைச்சரவையில் முதன்முதலாக மாற்றம் செய்யப்பட்டது. இராஜ.கண்ணப்பன், பிற்படுத்தப் பட்டோர் நலத் துறை அமைச்சராக பொறுப் பேற்றார். அவரிடம் இருந்த போக்குவரத்து துறை சிவசங்கருக்கு மாற்றப்பட்டது.

பிறகு, அமைச்சரவையில் உதயநிதி ஸ்டா லின் சேர்க்கப்பட்டார். அவருக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு, வறுமை ஒழிப்பு,  சிறப்பு திட்ட செயலாக்கத் துறைகள் அளிக்கப் பட்டன. அதே நேரம், கூட்டுறவுத் துறை, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்களின் இலாக்காக் கள் மாற்றப்பட்டன. இதுதவிர, வீட்டுவசதித் துறை யில் இருந்து சிஎம்டிஏ பிரிக்கப்பட்டு, அற நிலைய துறைஅமைச்சர் சேகர்பாபுவிடம் தரப்பட்டது. இந்நிலையில் தற்போது முதல்வர் பரிந்துரையின்பேரில், அமைச்சரவையில் இருந்து நாசர் விடுவிக்கப்பட்டுள்ளார். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மகனும், மன்னார்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பின ருமான டி.ஆர்.பி.ராஜா அமைச்சரவையில் இணைக்கப்பட்டுள்ளார். இதன்படி, ஆளுநர் மாளிகையில் வியாழக்கிழமை (மே 11) முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிய அமைச்சராக டிஆர்பி ராஜாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அவருக்கு தொழில்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சராக தங்கம் தென்னரசு  அமைச்சரவை மாற்றத்தையடுத்து சில  அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்பட்டுள் ளன. அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு நிதித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சராக இருந்த பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.  அமைச்சர் மனோ  தங்கராஜுக்கு பால் வளத்துறை அளிக்கப் பட்டுள்ளது. செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு தமிழ் வளர்ச்சித் துறை கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது.