வீரசோழன் ஆற்றில் தூர்வாரும் பணி மயிலாடுதுறை
, மே 16- மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் பாசன வசதிபெறும் வீரசோழன் ஆற்றில் விவ சாயிகள் கோரிக்கையை ஏற்று ரூ.27 லட்சத்தில் தூர்வாரும் பணி நடை பெற்று வருகிறது. விவசாயிகள் குறுவை சாகுபடி பணிக்காக மேட்டூ ரில் ஜுன் 12 ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்படு வதால் கடைமடை பகுதி களான தரங்கம்பாடி வட்டத் தில் உள்ள அரும்பாக்கம், இலுப்பூர், எடுத்துக்கட்டி சாத்தனூர், எரவாஞ்சேரி, உத்திரங்குடி உள்ளிட்ட பகுதிகளின் விவசாயிகளின் கோரிக்கை ஏற்று விவ சாயப் பணிகளுக்கு பாசன வசதி பெறும் வீரசோழன் ஆறு தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. அரும்பாக்கம் முதல் எடுத்துக்கட்டி சாத்தனூர் வரை வீரசோழன் ஆற்றில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின்கீழ் 9 கிலோ மீட்டர் தூரம் வரை சுமார் ரூ.27 லட்சத்திடில தூர்வா ரும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி உதவி செயற்பொறியாளர் ரவீந்திரன், உதவி பொறியாளர் சீனிவாசன் ஆகியோர் மேற்பார்வை யில் நடைபெறுகிறது.
ஆய்வுக் கூட்டம் பெரம்பலூர்,
மே 16- ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் மூலம் பெரம்பலூர் மாவட் டத்தில் மேற்கொள் ளப்படும் பல்வேறு திட்டங்களின் பணி முன் னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சி யர் கிரேஸ் பச்சாவ், தலை மையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத் தில் புதிய குளங்களை உருவாக்குதல், அரசு அலு வலகங்களுக்கு முறை யாக சுற்றுச்சுவர் கட்டுதல், தேவைப்படும் இடங்களில் குழந்தைகள் மையங்கள், நியாயவிலைக் கடைகள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஒவ் வொரு ஊராட்சி ஒன்றியம் வாரியாக ஆய்வு செய்தார்.