மத்திய பல்கலை. கருத்தரங்கில் முனைவர் வெ. இறையன்பு பங்கேற்பு
திருவாரூர் மாவட்டம் நீலக்குடி யில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் சமத்துவம் உரிமைகள் வாய்ப்புகள் என்ற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்றது. கருத்தரங்கத்திற்கு தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் மு.கிருஷ்ணன் தலைமை வகித்தார். கருத்தரங்கத்தில் பங்கேற்ற தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் முனைவர் வெ. இறையன்பு கருத்துரையாற்றினார். முனைவர் வெ.இறையன்பு பேசுகையில், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் கன்னியாகுமாரி முதல் காஷ்மீர் வரை பல்வேறு மாணவர்கள் படிப்பதும் இது ஒரு மினி இந்தியாவாக திகழ்வதும் மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், அரசின் வலுவான நடவடிக்கையால், குழந்தை தொழிலாளர் முறை பெருமளவில் குறைக்கப்பட்டதாகவும், தான் அரசு பணியில் இருந்தபோது பட்டு நூல் தொழிற்சாலையில் இருந்து பல்வேறு குழந்தைகளை மீட்டு, அவர்களுக்கு கல்வி அளித்ததாகவும், இன்று அவர்கள் பல்வேறு அரசு பணியில் இணைந்துள்ளதாகவும் தெரிவித்தார். புதுமைப்பெண் திட்டத்தால் பெண்கள் உயர்கல்வியில் ஆர்வம் காட்டி வருவதாகவும் சமீப காலமாக பல்வேறு பெண்கள் உயர் கல்வி பயில்வதாகவும் தெரிவித்தார். கல்வி, வேலை வாய்ப்பை மட்டும் தேடித்தராமல் ஒருவரை வாழ்வில் வெற்றியடையச் செய்யும் எனத் தெரிவித்தார். ஆங்கிலத்துறை பேராசிரியர் கீதா வரவேற்றார். வேதியியல் துறை இணை பேராசிரியர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.
தஞ்சாவூரில் இஃப்தார் நிகழ்ச்சி
தஞ்சை ஏஒய்ஏ ஸ்போர்ட்ஸ் மற்றும் பேமிலி கிளப் சார்பாக இஃப்தார் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி மற்றும் சமூக நல்லிணக்க விழா, நாஞ்சிக்கோட்டை சாலை ஏஒய்ஏ கிளப்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில், ஹஜ்ரத் அப்துல் ரஹ்மான், காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் கணேஷ் குமார், தஞ்சை மெயின் ரோட்டரி கிளப் தலைவர் மற்றும் வி.கே.வி நிறுவனம் வி.கே. கார்த்திக்கேயன், மஹாராஜா ரெடிமேட்ஸ் அர்சத் அஹமது, நேஷனல் பார்மா மருத்துவமனை முஜீபுர் ரஹ்மான், ஏஒய்ஏ கிளப் மார்ட்டின் மற்றும் ஜோன்ஸ் ஆகியோர் பங்கேற்ற, இந்த நிகழ்வில் அனைத்து மதம், சமுதாயங்களைச் சார்ந்த சுமார் 150 பேர் கலந்து கொண்டனர்.
திருச்சி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை: பெல் தொழிற்சங்கத்தினர் போராட்டம்
திருச்சி மாவட்டம் திருவெ றும்பூரை அடுத்துள்ள கைலாசபுரம் பகுதியில் பொதுத்துறைக்குச் சொந்தமான பெல் நிறுவனம் இயங்கி வருகிறது. பெல் நிறு வனத்தின் ஊரக வளாகத்தில் மாடுகள் மற்றும் நாய்களின் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தொழிற்சங்கங்கள் போராட்டங்கள் அறிவித்ததைத் தொடர்ந்து, வட்டாட்சியர் தலைமையில் பலகட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடை பெற்றும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை. அப்பேச்சுவார்த்தையில், மாடு களை தற்காலிகமாக அடைத்து வைக்க திருச்சி மாவட்ட அரசு நிர்வாகத்திடம் இடம் கேட்டு, எல்.பி.எப், ஏ.டி.பி., ஐ.என்.டி.யு.சி., பி.எம்.எஸ். உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் வலியுறுத்தி வந்தனர். பெல் நிறுவனத்தில் தொழில்நுட்ப பணியாளராக வேலை பார்த்து வரும் தமிழ்ச்செல்வன்(40) என்பவர், தனது மகனை பெல் நிறுவன வளாகத்தில் உள்ள ஒரு பள்ளியில் இருந்து அழைத்துக் கொண்டு, அதே வளாகத்தில், மற்றொரு பள்ளியில் படித்து வரும் ஒரு மகனை அழைப்பதற்காக கடந்த 19 ஆம் தேதி மாலை 4 மணிக்கு சென்றுள்ளார். பள்ளி யின் வாசல் பகுதியில் அவர் நின்று கொண்டிருந்தபோது, ஒரு சில மாடுகள் சண்டை போட்டுக் கொண்டு, ஓடிவந்து தமிழ்ச்செல்வ னையும், அவரது மகனையும் முட்டி கீழே தள்ளியது. இந்த மோதலில் தமிழ்ச்செல்வ னின் கழுத்துக்கு அருகே எழும்பு முறிந்தது. அவர் திருச்சி தில்லை நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இதுவரை சுயநினைவு திரும்பவில்லை. இந்நிலையில், எல்.பி.எப், ஏ.டி.பி., ஐ.என்.டி.யு.சி., பி.எம்.எஸ். உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் வெள்ளியன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெல் நிறுவன வளாகத்திற்குள் சுற்றித் திரியும் மாடுகளையும், நாய்களையும் உடனடியாகப் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். அந்த விலங்குகளால் பாதிப்புக்கு உள்ளான நபர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். தொடரும் அசம்பாவிதங்களைத் தடுக்கத் தவறியதாகக் கூறி திருச்சி மாவட்ட அரசு நிர்வாகத்தை கண்டித்து முழக்கம் எழுப்பினர்.