tamilnadu

img

கருணை ஓய்வூதியமும், போனஸ் உயர்வும்! கூட்டுறவுத்துறை ஊழியர்களுக்கு இரட்டை மகிழ்ச்சி

தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) மேற் கொண்ட இருபது ஆண்டுகால தொடர் போராட்டங்கள் இரண்டு முக்கிய வெற்றிகளைப் பெற்றுள்ளன. கூட்டுறவு சங்கப் பதிவாளரின் சமீபத்திய உத்தரவின்படி (ந.க. 74254/ 2015/நவ3, நாள்: 28.10. 2024) அனைத்து  வகை கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கும் கருணை ஓய்வூதியம் வழங்க புதிய ஒழுங்குமுறை விதிகள்-2024 அறிவிக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே 2021ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை (நிலை) எண் 22-ன்படி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கங்கள், நகர கூட்டுறவு கடன் சங்கங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 8,752 ஊழியர்களுக்கு மட்டுமே தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி மூலம் கருணை ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. தற்போதைய புதிய உத்தரவின்படி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு கடன்  சங்கம், பணியாளர் கூட்டுறவு சங்கம், நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை, பிரதம பண்டகசாலை, கூட்டுறவு விற்பனை சங்கம், கூட்டுறவு அச்சகம், மாநில மற்றும் மாவட்ட கூட்டுறவு ஒன்றி யங்கள் உள்ளிட்ட அனைத்து அமைப்பு களிலும் பணிபுரியும் ஊழியர்களுக்கு கருணை ஓய்வூதியம் கிடைக்கும். அதேபோல, 36 ஆண்டுகளாக உயர்த்தப்படாத போனஸ் தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது. கூட்டுறவு ஊழியர்களுக்கு 20% போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளதோடு, போனஸ் சட்டத்தின் கீழ் வராத சிறிய சங்கங்களிலும் நிகர லாபம் ஈட்டும் அமைப்புகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் 20% போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வெற்றிகளுக்கு முதலமைச்சர், கூட்டுறவுத்துறை அமைச்சர், கூட்டு றவு உணவு மற்றும் நுகர்வோர் பாது காப்புத்துறை கூடுதல் தலைமைச் செய லாளர், கூட்டுறவு சங்கங்களின் பதி வாளர் உள்ளிட்ட அனைவரின் ஒத்து ழைப்பும் கிடைத்ததாக சம்மேளனத் தலை வர் ஆ.கிருஷ்ணமூர்த்தி நன்றி தெரிவித்துள்ளார். மேலும் தனியாக “தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் ஓய்வூதிய நிதியம்” அமைத்தல், அரசின் நிதிப்பங்களிப்புடன் கருணை ஓய்வூதியத் தொகையை உயர்த்துதல், மருத்துவக் காப்பீடு, பொங்கல் பரிசு வழங்குதல் மற்றும் பால், வீட்டுவசதி, நெசவாளர், தொழிற் கூட்டுறவு போன்ற செயற்பதிவாளர்கள் கீழ் உள்ள சங்க ஊழியர்களையும் இத்திட்டத்தில் இணைத்தல் ஆகியவற்றுக்காக தொடர்ந்து போராட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.