மதுரை, ஏப்.3- இந்தியன் வங்கியின் தல்லாகுளம் பிரிவில் வெள்ளியன்று காலை ஓய்வூதியம் எடுப்பதற்கு நூற்றுக்கணக்கான முதியவர்கள் காத்திருந்தனர். ஓய்வூதியம் பெற வந்தவர்கள் கொரானோவிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் அடிப்படையில் சமூக விலகலை கடைப்பிடிக்கவில்லை. பலர் முகக் கவசம் அணியவில்லை. பின்னர் வங்கி அதிகாரிகள் கொரானோ பாதிப்பு குறித்து எடுத்துக்கூறி அவர்களை ஒரு மீட்டர் இடைவெளியில் நிற்கச் செய்து பின்னர் ஓய்வூதியம் வழங்கும் பணியைத் தொடங்கினர்.