மருத்துவர்கள் தினம் : சிபிஎம் வாழ்த்து!
கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தல்!
சென்னை, ஜூன் 30 - அர்ப்பணிப்புமிக்க சேவையாற் றும் மருத்துவர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. தேசிய மருத்துவர் தினத்தை யொட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வாழ்த்துச் செய்தி வெளி யிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்ப தாவது:
அர்ப்பணிப்பு மிக்க சேவையில் மருத்துவர்கள்
ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 1ம் தேதி மருத்துவர்கள் தினமாக கடை பிடிக்கப்படுகிறது. நாட்டின் பொது சுகாதாரம் மற்றும் மருத்துவத்தை மேம்படுத்துவது, மக்களுக்கான ஆரோக்கியமான வாழ்வை உறுதி செய்வது ஆகியவற்றில் மருத்துவர் களின் பங்கு மிக முக்கியமானதாகும். மக்களுக்கான மருத்துவ சேவையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றும் அனைத்து மருத்து வர்களுக்கும் மருத்துவர்கள் நாளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது தோழமை வாழ்த்துக்களை தெரி வித்துக் கொள்கிறது.
சுகாதாரத் துறையில் தமிழகம் முன்னணி
சுகாதாரத் துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்வதோடு, தொடர்ச்சியாக தேசிய அளவில் விரு துகளை வாங்கி சாதனை படைத்து வருகிறது. இதற்கு பெருமை சேர்க்கும் வகையில் சிறப்பாக பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு அரசாணை 354-இன் படி ஊதிய மாற்றத்தை அம லாக்குவதென்பது ஏற்கெனவே தமி ழக அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கோரிக்கை ஆகும். எனவே, காலம் தாழ்த்தாமல் உடனடியாக ஊதிய உயர்வை அமலாக்க வேண்டுமென்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம். மேலும், நோயாளிகள் : மருத்து வர்கள் விகிதத்தை கணக்கில் கொண்டு அரசு மருத்துவமனைகளில் கூடுதலான மருத்துவர்களை நியமிப்பதற்கான நடவடிக்கையை மே ற்கொள்ள வேண்டும்; கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த அசாதா ரண சூழலில், அரசுக்கு உறுதுணை யாக இருந்த அரசு மருத்துவர்கள் பணி மகத்தானது என முதல்வர் அவர்களே நேரடியாக பாராட்டிய நிலையில் கொரோனா பேரிடரில் பணி யாற்றி உயிரிழந்த அரசு மருத்து வர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்குவது எனும் கோரிக்கை அமலாக்கப்படாமல் நிலுவையில் உள்ளது; இதனைக் கவனப்படுத்துவ துடன் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள அரசு மருத்துவர்களின் கோரிக் கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டுமென தமிழக அரசை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.