உத்தங்குடியில் இன்று திமுக பொதுக்குழு கூட்டம் மதுரையில் முதல்வர் ஸ்டாலின் மாபெரும் சாலைவழி மக்கள் சந்திப்பு!
வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வரவேற்பு
மதுரை, மே 31- மதுரையில் ஞாயிற்றுக் கிழமை (ஜூன் 1) அன்று திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதற் காக 10 ஆயிரம் பேர் அம ரும் வகையில், மதுரை - மேலூர் சாலையிலுள்ள உத் தங்குடியில் 30 ஏக்கர் பரப்ப ளவில் பிரம்மாண்ட அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுக் குழுவில் கலந்து கொள்வ தற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை யன்றே (மே 31) மதுரை வந்த டைந்தார். காலை 11 மணிக்கு விமானம் மூலம் வருகை தந்த முதல்வர் மு.க. ஸ்டா லினுக்கு, விமான நிலை யத்தில் மதுரை மாவட்ட திமுக சார்பில் உற்சாக வர வேற்பு அளிக்கப்பட்டது. சாலைவழி மக்கள் சந்திப்பு அதைத் தொடர்ந்து தனி யார் நட்சத்திர விடுதியில் தங்கி ஓய்வெடுத்த முதல் வர், முன்னாள் மேயர் முத்து சிலை திறப்பு நிகழ்வில் பங்கேற்பதற்காக மாலை 5 மணிக்கு பெருங்குடியில் இருந்து சாலைவழி மக்கள் சந்திப்புப் பயணத்தைத் துவங்கினார். அவனியாபுரம், வில்லா புரம், சோலையழகுபுரம், ஜீவா நகர், டிவிஎஸ் நகர் பாலம், பழங்காநத்தம் ரவுண்டானா, பைபாஸ் ரோடு, காளவாசல், குரு தியேட்டர், திண்டுக்கல் ரோடு சந்திப்பு என ஆரப்பாளையம், ஆரப் பாளையம் கிராஸ் மன்னர் திருமலை நாயக்கர் சிலை, மதுரா கோட்ஸ் ஆலை வரை 22 கிலோ மீட்டர் தூரத்திற்கு வழிநெடுகிலும் திரண்டி ருந்த பொதுமக்கள் மற்றும் கட்சியினரை, திறந்த வேனில் நின்றபடியும், வில்லாபுரம், ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் வேனில் இருந்து இறங்கி நடந்து சென்றும் முதல்வர் சந்தித்தார். மலர்களைத் தூவி வரவேற்பு அப்போது, முதல்வ ரின் கைகளைக் குலுக்கியும், அவர் மீது மலர்களைத் தூவி யும், மாலைகள், சால்வை கள் மற்றும் புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கி யும் முதல்வருக்கு பொதுமக் கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பலர் தங்களின் கோரிக்கை மனுக்களையும் வழங்கினர். முதல்வரை வர வேற்று பல இடங்களிலும் கலைநிகழ்ச்சிகளும் நடை பெற்றன. நிறைவாக மதுரா கோட்ஸ் ஆலை அருகே- திமுகவின் மூத்த தலை வர்களில் ஒருவராக இருந்தவரும், மதுரை மாநக ராட்சியின் முதல் மேயரு மான முத்து சிலையை முதல் வர் திறந்து வைத்தார். 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பின்னர் அரசு சுற்றுலா மாளிகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தங்கினார். ஞாயிற் றுக்கிழமை காலை 10 மணிக்கு பொதுக்குழு கூட் டத்தில் கலந்து கொள்ளும் முதல்வர், மாலை 6.15 மணி யளவில் பயணிகள் விமா னத்தில் புறப்பட்டு, இரவு 7.40 மணிக்கு சென்னை சென்ற டைகிறார். முதல்வரின் மதுரை வரு கையையொட்டி, மாநகர காவல் ஆணையர் லோக நாதன் தலைமையில் 2 ஆயி ரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.