சென்னை, அக்.15- மக்கள் ஆதரவு பெறாத எந்த போராட்டமும் வெற்றி பெறாது எனவே மக்களிடம் செல்வோம், மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று சிஐடியு மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன் கூறினார். சென்னை நுங்கம்பாக்கத்தில் சனிக்கிழமை (அக்.15) நடைபெற்ற ஒன்றிய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் மாநாட்டில் அவர் பேசிய தாவது; 1991ஆம் ஆண்டிற்கும் முன்னர் திட்டமிட்ட பொருளாதாரத் திட்டம் இருந்தது. 1991ஆம் ஆண்டிற்கு பிறகு ஏற்பட்டிருக்கக் கூடிய பொரு ளாதார நெருக்கடிக்குக் காரணம் திட்டமிடல் இல்லாத பொருளாதாரத் திட்டம். நாடு விடுதலை அடையும் போது நமது நாட்டினுடைய பொரு ளாதாரம் சந்தை பொருளாதாரமாக இருந் தது. அப்போது கல்வியின் கற்றவர்களின் எண் ணிக்கை 17 விழுக்காடாக இருந்தது. அப்போது அமெரிக்கா உங்கள் நாடு விவசாயிகள் நாடு விவசாயத்திற்கு தேவையான உதவிகளை செய் கிறோம் என்றார்கள். ரஷ்ய ஜனாதிபதி ஸ்டா லின் உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்து தருகிறோம் என நேருவிற்கு கடிதம் எழுதினார். சோசலிச நாடான ரஷ்யாவில் இருந்து கிடைத்துதான் நெய்வேலி, பி.எச்.இஎல்., பிலாய் உருக்காலை மற்றும் ஏராளமான கல்லூரிகள். இவை யெல்லாம் திட்டமிட்ட பொருளாதாரத்திற்கு உதவியது.
அப்போது டாடா பிர்லாவின் பொருளா தாரம் ஏன் எடுபடவில்லை என்றால், இருவரிட மும் சேர்த்தே 45 கோடி ரூபாய்தான் இருந்தது. அவர்களால் ஒரு நெய்வேலி, பிலாயை உரு வாக்க முடியாது. மக்களுடைய வரிப் பணத்தில் உருவானதுதான் பொதுத்துறை நிறுவனங்கள். தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் திவாலான போதுதான் எல்.ஐ.சி. பொதுத்துறை நிறுவன மாக்கப்பட்டு இன்று ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது. இந்திராகாந்தி காலத்திலேயே பொதுத் துறை நிறுவனங்களை தனியார்மய மாக்க கமிட்டி அமைக்கப்பட்டது. பொதுத்துறை நிறுவனங்களை படிப்படியாக தனியார்மய மாக்குவது என அர்ஜூன் சென்குப்தா கமிட்டி பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரை 1991ஆம் ஆண்டிற்கு பிறகு அமலாக துவங்கியது. 1991ஆம் ஆண்டு துவங்கிய சந்தை பொரு ளாதாரம் 2014ஆம் ஆண்டிற்கு பிறகு மிக வேகமாக மாறுகிறது. மிக வேகமாக மாறும் போது இந்திய பெரு முதலாளிகள் அனைத்தை யும் எங்களிடம் கொடுத்து விடுங்கள் எனக் கேட்கி றார்கள். அரசுத்துறை என்பது உபயோகமில் லாத துறை. அரசுத்துறைகளில் யாரும் பணி யாற்றுவது இல்லை. ஆசிரியர்கள் சரியாக பாடம் கற்பிப்பதில்லை என்ற அவதூறுகள் திட்ட மிட்டு பரப்பப்படுகின்றன. அதற்கு சில ஊடகங்க ளும், பத்திரிகைகளும் ஒத்துழைக்கின்றன.
உலகம் முழுவதும் டிஜிட்டல் பொருளா தாரம் வந்த பிறகு பல்வேறு பணியிடங்கள் காலி யாகி விட்டன. மாறிவரும் உலகச் சூழலுக் கேற்ப தொழிற்சங்க நடவடிக்கைகளையும், பணி களையும் மாற்றி அமைக்க வேண்டியுள்ளது. எம்காம், எம்ஏ, பிஏ, எம்பிஏ படித்தவர்கள் எல்லாம் சொமோட்டாவில் உணவு சப்ளை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை திரட்டும் பணியை நாம் மேற்கொள்ள வேண் டும். அவுட்சோர்சிங் முறையில் பணியாற்றும் பணியாளர்களை, ஒப்பந்த தொழிலாளர்களை நாம் திரட்டினால்தான் இப்போதிருக்கக் கூடிய பணிகளை பாதுகாக்க முடியும். சாதி ரீதியாக மத ரீதியாக தொழிலாளர்களை உழைக்கும் மக்களை பிரிக்கும் பணியை ஒன்றிய பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது. சாதிக்கு அப்பாற்பட்டு, மதங்களுக்கு அப் பாற்பட்டு தொழிலாளர்கள், ஊழியர்கள் என்ற அடிப்படையில் அனைவரையும் திரட்ட வேண்டும். அப்போதுதான் அரசின் வலது சாரிக் கொள்கைகளை மாற்ற முடியும். முன்பு நடத்திய வேலை நிறுத்தத்திற்கு கிடைத்த மரி யாதை தற்போது இல்லை. ஏனென்றால் மக்கள் ஆதரவு பெறாத எந்த ஒரு போராட்டமும் வெற்றி பெறுவதில்லை. மக்களிடம் செல்வோம், மாற் றத்தை ஏற்படுத்துவோம் என்றார். முன்னதாக ஒன்றிய அரசு ஊழியர் சம்மேள னத்தின் மாநிலத் தலைவர் ராமமூர்த்தி சங்க கொடியை ஏற்றிவைத்து தலைமை தாங்கி னார். ஆர்.பி.சுரேஷ் வரவேற்றார். ஆர்.கிருபா கரன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தென் மண்டல துணைத் தலைவர் க.சுவாமிநாதன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். பொதுச் செயலாளர் எம்.துரைபாண்டியன் வேலை அறிக்கையையும், பொருளாளர் எம்.எஸ்.வெங்கடேசன் வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். ஆறுமுகநயினார் (இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம்) வாழ்த்திப் பேசி னார். துணைத்தலைவர் எஸ்.சாம்ராஜ் நன்றி கூறினார்.