tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

சாலையில் திரியும் ஆடுகளால் இடையூறு

பாபநாசம், ஏப்.21-  பாபநாசம் - சாலியமங்கலம் முக்கிய சாலையில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக ஆடுகள் குறுக்கும், நெடுக்குமாக செல்லும் நிலை உள்ளது.  இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது.  இதேபோன்று பாபநாசத்தில் கும்பகோணம் - தஞ்சாவூர் மெயின் சாலையில் ஆடுகள் சாலையில் உட்கார்ந்து கொள்கின்றன. சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக நிற்கின்றன. தெருக்களில் சுற்றித் திரியும் ஆடுகள், வீடுகளில் நிறுத்தப்பட்டிருக்கும் பைக், கார் உள்ளிட்ட வாகனங்களில் ஏறுகின்றன. இதனால் பைக் சீட் கிழிகின்றன. காரில் கீறல்கள் விழுகின்றன. ஆடுகளை தெருக்களில், சாலைகளில் மேயவிடும் ஆட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

குறுங்காடுகளை உருவாக்க மரம் நடும் விழா: பெரம்பலூர் ஆட்சியர் துவக்கி வைத்தார்

பெரம்பலூர், ஏப்.21-  பெரம்பலூரில், மாவட்ட நிர்வாகம் மற்றும் அஸ்வின் குழுமம் சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலை அருகே, மியாவாக்கி எனப்படும் குறுங்காடுகளை உருவாக்கிடும் வகையில் 3.5 ஏக்கர் பரப்பளவில் 40,000 மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் திங்கட்கிழமை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், வேம்பு, அசோகா, புளி, மகிழம், நீர் மருது, நாவல், இலுப்பை, மகாகனி, செம்மரம், தேக்கு, கொய்யா,புங்கன் உள்ளிட்ட பல்வேறு வகையான 40,000 மரக்கன்றுகள் மற்றும் மியாவாக்கி அடர்வன பகுதி உருவாக்குவதற்காக ஆழ்துளை கிணறுகள், பைப்லைன், மரக்கன்றுகளுக்கு சொட்டுநீர் பாசன வசதி மற்றும் மரக்கன்றுகள் நடவு செய்யப்படும் 3.5 ஏக்கர் நிலப்பரப்பினை முழுவதும் சீர்திருத்தம் செய்து, மரக்கன்றுகள் நடுவதற்கு பெரம்பலூர் அஸ்வின் குழும தலைவர் கே.ஆர்.வி. கணேசன் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.  அஸ்வின் குழும பணியாளர்கள் பலரும் மரக்கன்றுகளை நட்டுவைத்தனர்.

பழுதடைந்த மின் கம்பங்கள் அகற்றம்: புதிய கம்பங்கள் மூலம் இணைப்பு நல அமைப்பின் கோரிக்கை ஏற்பு

திருத்துறைப்பூண்டி, ஏப்.21-  திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகரத்தில் 15 ஆவது வார்டில் மின் கம்பங்கள் பழுதடைந்து இருந்ததை சாமியப்பா நகர் தெரு நல அமைப்பின் சார்பில் பழுதடைந்த மின் கம்பங்களை சரி செய்ய, அமைப்பின் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. இதையடுத்து, பழுதடைந்த மின் கம்பங்களை அகற்றி புதிய மின் கம்பங்களை வைத்து மின் இணைப்புகள் வழங்கப்பட்டன.  நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன், துணைத் தலைவர் ஜெயபிரகாஷ், உதவி மின் பொறியாளர் எம். வெங்கட்ராமன், உதவி செயற்பொறியாளர் பிவி. பிரபு ஆகியோர் இதனை மேற்கொண்டனர்.  இந்த நிகழ்வை பாராட்டும் விதமாக தெருநல அமைப்பின் தலைவர் நரசிம்மன், துணைத் தலைவர் பாலு, செயலாளர் சந்திரசேகரன் பொருளாளர் சம்மந்தம் இணைச் செயலாளர் கார்த்திகேயன், மாரிமுத்து செந்தில் ஆகியோர் திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு நன்றி தெரிவித்து பாராட்டினர்.

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில்  தொழிற்சங்க கொடிமரம் அகற்ற எதிர்ப்பு: சாலைப் பணியாளர்கள் 12 பேர் கைது

திருச்சிராப்பள்ளி, ஏப்.21-  சாலைகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கட்சிக கொடிக் கம்பங்கள் மற்றும் கல்வெட்டுகளை அகற்ற, சென்னை உயர்நீதிமன்றம் நெடுஞ்சாலைத் துறைக்கு ஆணையிட்டது. அதைத்தொடர்ந்து, பிரதான கட்சி தலை வர்கள் அனுமதியின்றி அமைக்கப்பட்ட கொடிக்கம்பங்களை அகற்றிடுமாறு கட்சியி னருக்கு கட்டளையிட்டனர்.  இதற்கு நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியது. நீதிமன்றம் அனுமதித்த காலக்கெடு நிறைவடைந்ததைத் தொடர்ந்து,  திங்கட்கிழமை திருச்சி டிவிஎஸ் டோல்கேட்  பகுதியில் உள்ள திமுக கொடிக்கம்பம் மற்றும் மதிமுக கல்வெட்டு ஆகிய வற்றினை நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கள் அகற்றினர். அதைத் தொடர்ந்து டிவிஎஸ் டோல்கேட் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு  நெடுஞ்சாலைத்துறை, சாலைப் பணியா ளர் தொழிற்சங்கம் சார்பில் அமைக்கப்பட்டி ருந்த கல்வெட்டை அகற்ற சென்றனர். அப்போது, சாலைப் பணியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அதிகாரிகளுக்கும், சாலைப் பணியாளர்களுக்கும் இடையே, வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், சாலைப்  பணியாளர்கள் 12 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.