சென்னை,பிப்.3- ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறை யன்பு உத்தரவிட்டுள்ளார். இதன்படி, சமூக பாதுகாப்புத் துறை இயக்குநர் வளர்மதி ராணிப் பேட்டை மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள் ளார். ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சி யர் பாஸ்கர பாண்டியன் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா சமூக பாதுகாப்பு துறை இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.