tamilnadu

மதுரையில் கொரோனா பரவல், பலி வதந்திகளுக்கு வித்திடும் மாவட்ட, மருத்துவமனை நிர்வாகம்

மதுரை, ஜூன் 24- மதுரை மாவட்ட நிர்வாகமும், மருத் துவமனை நிர்வாகமும் மதுரை கொரோ னாபரவல் குறித்த விவரங்களை வழங்க மறுக்கின்றனர். அதிகாரி களோ ஆட்சியர் யாரிடமும் எதுவும் கூறக்கூடாது என்கிறார். தமிழக சுகா தாரத்துறை இரவு ஏழு மணிக்கு பின் வெளியிடும் அறிக்கையில் பொத்தாம் பொதுவாக மதுரை விவரம் இடம் பெறுகிறது. தெளிவான விவரங்கள் இல்லை. இந்த விவரங்களை மாவட்ட நிர்வாகத்தால் மட்டுமே வழங்க முடி யும்.  இந்த நிலையில் மதுரையில் வியா ழனன்று கொரோனாவால் ஆறுபேர் பலி, ஒன்பது பேர் பலி, பத்துபேர் பலி, பத்தொன்பது பேர் பலி என ஒவ்வொரு விதமாக செய்திகள் வெளியானிது. மதுரையில் ஜூன் 22-ஆம் தேதி வரை 883 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஜூன் 23-ஆம் தேதி 93 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

ஜூன் 24-ஆம் தேதி 97 பேர் பாதிக்கப் பட்டிருந்தனர் மொத்தம் 1,073 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மதுரை கொரோனா சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டி ருந்த ஆறு பேர் உயிரிழந்துவிட்டனர். இவர்களில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் மற்றவர் கள் அறிகுறியுள்ளவர்கள் எனக் கூறப் பபட்டது.  இதற்கிடையில் வியாழனன்று 152 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மதுரையில் மொத்த பாதிப்பு எண் ணிக்கை 1,225 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவிற்கு ஆறு பேர் அல்ல 12 பேர் உயிரிழந்துவிட்டனர் என்று ஒரு தகவலும், பத்து பேர் இறந்துவிட்டனர் என்ற தகவலும் றெக்கை கட்டி பறந் தது.

விஷயமறிந்த ஒருவரிடம் விசா ரித்தபோது, “புதன்கிழமை இரவு 12 மணியிலிருந்து வெள்ளிக்கிழமை காலை வரை 11 பேர் இறந்துவிட்ட னர்” ஆனால், அவர்கள் கொரோனா வால் இறந்தார்கள் என மருத்துவ மனை நிர்வாகம் சொல்ல மறுத்துவரு கிறது என்றார். இதுகுறித்து ‘டீன்’ சங்குமணி யிடம் கேட்டபோது, ‘‘மதுரையில், செவ்வாயன்று இரண்டு பேரும், புத னன்று இரண்டு பேரும் மட்டும் ‘கொரோனா’வுக்கு உயிரிழந்துள்ள னர். மேலும் இன்று சிலர் உயிரி ழந்துள்ளனர். அவர்களின் ‘கொரோனா’ பரிசோதனை முடிவு இன்னும் வரவில்லை. வந்தபிறகு தெரிவிக்கப்படும். மதுரை போன்ற பெரிய அரசு மருத்துவமனையில் தினமும் வெவ்வெறு நோய் பாதிப்புகளுக்குள் ளாகி சிகிச்சைக்கு கடைசி நேரத்தில் வருவோர் சிகிச்சை பலனளிக்கா மல் உயிரிழப்பது வழக்கம்.

அவர் களையும் ‘கொரோனா’வால் இறந்த தாக கூறுவது தவறு. ‘கொரோனா’ பாதிப்பும், அதன் உயிரிழப்பும் மறைக்  காமல் வெளிப்படையாக சொல்லப் படுகிறது’’ என்றார். பொதுவாக மதுரையில் தொற்று பாதிக்கப்பட்டோர், செய்யப்பட்ட சோதனைகள், குணமடைந்தோர் எண் ணிக்கை, உயிரிழப்பு எண்ணிக்கை குறித்து ஆட்சியர் உள்ளிட்டு யாரும் வாய்திறக்க மறுத்து மௌனமாகவே உள்ளனர்.  மதுரை மாவட்ட நிர்வாகம் தினம்தோறும் பத்திரிகைகள், ஊட கங்களுக்கு கொரோனா பரவல் குறித்த தகவல்களை வழங்க வேண் டும். அதுவே யூகங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும்.