tamilnadu

img

ராஜராஜ சோழன் காலத்தைச் சேர்ந்த குமிழி கல்வெட்டு கண்டுபிடிப்பு

சிவகங்கை, மார்ச் 29- சிவகங்கை மாவட்டம் திருப்புவ னம் தாலுகா திருப்பாச்சேத்தியில் உள்ள வடக்கு கண்மாயின், கிழக்கு கரையில் உடைந்த நிலையில் உள்ள  ஒரு குமிழி கல்வெட்டு கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. தர்மபுரி  ஆசிரியர் இளங்கோ (ஓய்வு), பேராசிரியர் சி. சந்திரசேகர் வரலாற்று துறை, அரசு கலைக் கல்லூரி, தர்மபுரி ஆகியோர் இணைந்து இப்பகுதியில் தொடர்ச்சி யான கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். சீனன், இளந்திரையன் போன்றோர் களஆய்வில் பங்கேற்று உள்ளனர். திருப்பாச்சேத்தியை சேர்ந்த முத்துக்குமரன், ஐயப்பன் ஆகியோர் வழங்கிய தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர். இந்த கள ஆய்வில் கண்மாயில் உள்ள மதகு பகுதியில் உடைந்து போன ஒரு குமிழி கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் இருந்த பழைய மதகை உடைத்து விட்டு புதிய மதகு கட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட பணிகளின் பொழுது கல்வெட்டுகள் உடைக்கப்பட்டு கண்மாயில் குவித்து வைக்கப்பட்டிருந்தது. அவற்றில் ஒரு  சிறு துண்டு கல்வெட்டு மட்டும் மூன்று  வரிகளுடன் காணப்படுகிறது. கல் வெட்டின் மேல் பகுதியில் இரு வரி களும் சிறிது இடம் விட்டு ஒருவரி யும் காணப்படுகின்றது. ராஜராஜ சோழனால் அமைக்கப்பட்ட மதகு என்ற செய்தியை மட்டும் அறிந்து கொள்ள இயலுகிறது. இதனுடைய மற்றொரு பகுதி எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. அதை கண்டு பிடித்தால் மட்டுமே முழுமையான செய்தியை அறிய இயலும். ஆனால் இத்தகைய குமிழி கல்வெட்டுகள் இப்பகுதியில் ஏராளமாக கிடைக் கின்றன. நீர் குவிந்து மதகு வழியாக வெளியேறும் இடத்தில் இவை வைக்கப் படுவதால் குமிழி கல்வெட்டுகள் என்று  அழைக்கப்படுகின்றன என்று பேரா சிரியர் சந்திரசேகர் குறிப்பிடுகின்றார். இக்கல்வெட்டு ராஜராஜன் காலத்தைச் சார்ந்ததாகும்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தின் பெரிய ஏரிகளில் குமிழித் தூம்பு என்ற நீர் ஒழுங்கு அமைப்பை  நிறுவித் திறம்படப் பாசன நீர் மேலாண்மை செய்து வந்தவர்கள் தமி ழர்கள். இந்த குமிழித் தூம்பு அமைப்பு  மூலம் பாசனத்திற்குத் தண்ணீர் அளித்தது மட்டுமின்றி, ஏரிகள் வண்டல் படிந்து தூர்ந்து போகாமலும் தடுத்த னர். பாசன நீர் நிர்வாகத்தில் தமிழர்கள் சிறந்து விளங்கினார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தடுப்பணை கள் அமைத்து நீரின் பயனை அந்தப் பகுதி மக்களுக்கு அளித்தனர். சங்கிலித் தொடராகக் குளங்களை  அமைத்தனர். பெரிய குளங்களை ஒன்றுடன் ஒன்று இணைத்து அவற்றி ற்கு ஆற்றில் இருந்து தண்ணீர் அளி த்து, உபரி நீர் மீண்டும் ஆற்றுக்கே  வந்து சேரும் வழி அமைத்தனர். பாசனக் கண்மாயில் தண்ணீரை திறந்து விடவும், நிறுத்தவும் குமிழி எனும் முறை பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனருகே உயரமான குமிழிக்கால்கள் நடப்பட்டு இருக்கும் இந்தக் கல்வெட்டுகள் பழங்கால பாசன முறையில் தமிழர்கள் கொண்டி ருந்த நீர்ப்பாசன மேலாண்மை நுட்பத் தையும், நீர்ப்பங்கீட்டில் பின்பற்றப் பட வேண்டிய சமூக நடைமுறைகளை யும் வெளிப்படுத்துபவையாக உள்ளன. பாசன நீர் நிர்வாகத்தில் தமிழர்கள் சிறந்து விளங்கினார்கள். எனவே இத்தகைய கல்வெட்டுகளை பதிவு செய்வதோடு பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் எதிர்கால சந்ததி களுக்கு அவற்றை ஆவணப்படுத்த வேண்டும் என்றும் பேராசிரியர் சந்திர சேகர் மற்றும் சமூக ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.