tamilnadu

img

வைப்பாற்றங்கரையில் புதிய தொல்லியல் மேடு கண்டுபிடிப்பு

சாத்தூர்,நவ.26- விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே வைப்பாற்றின் கரையில் உள்ள சங்கரநத்தம் கிராமத்தின் அருகே தொன்மையான புதிய  தொல்லியல் மேடுகள் கண்டறி யப்பட்டுள்ளன. மேலும் இங்கு நுண்கருவிகள், விளையாடப் பயன்படுத்தப்படும் மண்ணாலான வட்ட சில்லுகள், எடைக் கல், கல்லால் செய்யப் பட்ட பாசிமணி, சங்கு வளையல்கள் அதிக அளவில் கருப்பு சிவப்பு பானை ஓடுகள், வில், அம்பு  உருவம் பொறித்த பானைக் குறி யீடு ஆகியவை கண்டறியப் பட்டுள்ளன. சமீபத்தில்,  இங்கு கற்காலத்தைச் சேர்ந்த கருவி ஒன்று கண்டறியப்பட்டது.  இதுகுறித்து பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் உறுப்பினர் பா. ரவிச்சந்திரன்  கூறியதாவது: வைப்பாற்றங்கரையில் கிடைத்த வில், அம்பு குறியீட்டு டன் கூடிய பானை ஓடு மற்றும் ஆய்வில் கிடைத்த இதரப் பொருள் கள், 1986 -ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல்  தொல்லியல் ஆய்வாளர் ஆர். பாலச் சந்திரனால் கண்டறியப்பட்டது, தற்போது தமிழக தொல்லியல் துறை யால் அகழ்வாராய்ச்சி செய்யப்படும் வெம்பக் கோட்டை தொல்லியல் மேடு, சங்கரநத்தம் பகுதியிலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

வைகையாற்றின் தெற்கே அதன் கரையிலும், அதனுடன் இணையும் நதிகளில் ஒன்றான அர்ச்சுனா நதிக்கரையிலுள்ள தொன்மையான இடங்களிலும் சுமார் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு  வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய நுண்கருவிகள்  அதிகம் கிடைத்துள்ளன. அத்துடன் பெருங்கற்காலம் என்று அழைக்கப்படும் சங்ககால மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் அதிகம் கிடைத்துள்ளன. சங்க காலத்தில் சுத்தியலாகப் பயன்படுத்தப்பட்ட கற்காலக் கருவி ஒன்றும் சங்கரநத்தத்தில் கண்டெடுக்கப்பட்டது. மிக அரிய தாகவே கற்கால கருவிகள் இந்தப் பகுதியில் கிடைக்கின்றன. ஆகவே, இந்த இடத்தில் வாழ்ந்த  தொல் குடிமக்கள் தங்களின் தேவைக்காக கற்கால கருவிகளை வேறு இடத்திலிருந்து நுண்கருவி காலம் முதல் பெருங்கற்காலம் வரை பயன்படுத்தியதாக அறியப் படுகிறது. சுமார் 6 ஆயிரம் ஆண்டு களுக்கு முந்தைய காலமான சங்க காலம் வரை தொடர்ந்து மக்கள் இங்கு வசித்து வந்ததால்தான் வைப் பாற்றங்கரைகளில் செழுமையான நாகரிகம் செழித்தோங்கி வளர்ந்து இருப்பதை அறிய முடிகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

;