தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு 4 மணி நேரம் மட்டும் வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் செவ்வாயன்று சிறைநிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு, சங்கத்தின் அகில இந்திய செயல் தலைவர் எஸ்.நம்புராஜன் தலைமை வகித்தார். இதில் மாவட்டச் செயலாளர் ப.மாரிமுத்து, உதவிச்செயலாளர் எஸ்.ரேணுகா, நகரத் தலைவர் எம்.ஆனந்தன், செயலாளர் எஸ்.செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டு கைதாகினர்.