tamilnadu

img

இயக்குநர் மனோபாலா காலமானார்

சென்னை,மே 3- தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான மனோபாலா சென்னையில் (மே 3) காலமானார். அவருக்கு வயது 69. 1979 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான புதிய வார்ப்பு கள் படத்தின் மூலம் உதவி இயக்குநராக அறிமுக மான மனோபாலா அப்படத் தில் ஒரு சிறிய கதாபாத் திரத்திலும் நடித்திருந்தார். தொடர்ந்து நிறம் மாறாத  பூக்கள், கல்லுக்குள் ஈரம், என ஏராளமான படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார். பாலா இயக்கத் தில் வெளியான பிதா மகன் படத்தில் அவரது  கதாபாத்திரம் பேசப்பட்டது. வடிவேலு, விவேக், சந்தானம் ஆகியோருடன் அவர் இணைந்து நடித்த  நகைச்சுவை காட்சிகள் பிரபலமாகின. விவேக் உடன் ஒரு படத் தில் அவர் பேசிய ‘எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்’ என்ற வசனம் டிரேட் மார்க் ஆனது. நடிப்பு  தவிர்த்து ஏராளமான படங்களையும் மனோபாலா இயக்கியுள்ளார். ரஜினி காந்த், மோகன், சத்யராஜ், கார்த்திக் என பல்வேறு முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி யுள்ளார். 2011 ஆண்டுக் கான சிறந்த நகைச்சுவை நடி கருக்கான தமிழ்நாடு அரசு விருதையும் பெற்றவர். கடந்த 10 நாட்களுக்கு  முன்பு உடல்நலக் குறை வால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்ட அவர் புத னன்று (மே 3) சிகிச்சைப்  பலனின்றி இறந்தார். அவரது மறைவுக்கு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருக் கிறார்.

அதன் விவரம் வரு மாறு:- திரைப்பட இயக்கு நரும், தயாரிப்பாளரும், நடிகருமான மனோபாலா உடல்நலக் குறைவால் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். சிறந்த இயக்குநராக மட்டுமின்றி, அனைவரையும் மகிழ்விக் கும் நல்ல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரா கவும் விளங்கிய அவரது மறைவு திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப் பாகும். சமீபத்தில் என்னு டைய பிறந்தநாளை முன் னிட்டு, அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட் சியைப் பார்வையிட்டு அவர்  பாராட்டி பேசியது இந்தத் தருணத்தில் என் நெஞ்சில் நிழலாடுகிறது. மனோபாலாவின் மறை வால் அவரைப் பிரிந்து  வாடும் அவரதுகுடும்பத் தினர், திரையுலகினர், ரசிகர் கள், நண்பர்கள் அனை வருக்கும் எனது ஆழ்ந்த  இரங்கலையும், ஆறு தலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர்  தெரிவித்திருக்கிறார்.  தமிழ்நாடு அரசு திரைப் பட விருதுகள் மற்றும் சின்னத்திரை விருதுகள் தேர்வுக்குழு உறுப்பினரான மனோபாலா மறைவுக்கு செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திரைப் பட இயக்குநர்கள் மணிரத் தினம், பாரதிராஜா உள்ளிட்ட பலரும் இரங்கல்  தெரிவித்துள்ளனர். சென்னை சாலி கிராமத்தி லுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உட லுக்கு திரையுலகத்தினர், அரசியல் கட்சி தலை வர்கள் அஞ்சலி செலுத்தி னர்.