tamilnadu

img

மன உளைச்சலில் திண்டுக்கல் பேகம்பூர் மக்கள்

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு இதுவரை 74 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இந்த நோய்க்கு ஆளான வர்கள் ஏராளமானோர் உள்ள நிலை யில் தில்லி இஸ்லாமிய மாநாட்டிற்கு சென்று வந்தவர்களால் தான் இந்த நோய் பரவியதாக பாஜக போன்ற மத வாத அமைப்புகளால் பிரச்சாரம் செய் யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் 90 பேர் மாநாட்டிற்கு சென்று வந்ததாக வும் அவர்களில் 17 பேருக்கு தொற்று உறுதி என்று திண்டுக்கல் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு தனிமைப்படுத் தப்பட்டனர். அத்தோடு நிற்கவில்லை, பேகம்பூர் முழுக்க சீல் வைக்கப்பட்டது. வெளி உலகத்தோடு இருந்த தொடர்பு துண்டிக்கப்பட்டது. பேகம்பூர் மக்க ளால்தான் திண்டுக்கல் பகுதியில் கொரோனா கொண்டு வரப்பட்டதாக வும் வதந்தி பரப்பப்பட்டது.

அரசாங்கத்தால் ஒரு பகுதி சீல் வைக்கப்படும் போது அந்தப் பகுதிக்கு தேவையான உணவு உள்ளிட்ட அனைத்து விதமான வசதிகளையும் செய்து தர வேண்டும். ஆனால் அப்படி செய்ய வில்லை. பேகம்பூர் பகுதிக்குள் பால் பாக்கெட்டுகள், காய்கறிகள் ஆகிய அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க வில்லை. மளிகைக் கடைகள் திறக்கப் படவில்லை. இதனால் பேகம்பூர் பகுதி ஒரு சிறைச்சாலை போல் ஆக்கப்பட்டது. காலை 6 மணி முதல் 9 மணி வரை ஊர டங்கு தளர்த்தப் படும். அந்த சமயத்தில் அப்பகுதி மக்கள் தங்களுக்கு தேவை யான காய்கறிகள் உள்ளிட்ட அத்தியா வசிய பொருட்களை வாங்கிக் கொள்ள வேண்டும். ஆனால் இரு சக்கர வாக னத்தில் செல்வதற்கு அனுமதி இல்லை. அப்படி செல்பவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சூழ்நிலையில் மேட்டுப்பட்டி யில் இயங்கிவந்த தற்காலிக காய்கறி மார்க்கெட் தடை செய்யப்பட்டது. ரேசன் கடைகளில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆயிரம் ரூபாய் அறிவிப்பு வெளியான போது அந்த பகுதி மக்களுக்கு முதலில் ஆயிரம் ரூபாய் மற்றும் அரிசி, கோதுமை வழங்க ரேசன் கடைகள் மறுத்தன. வேறு பகுதியில் உள்ள ரேசன் கடைகளுக்குச் சென்றாலும் பொருட்கள் வழங்க வில்லை. மக்கள் இதற்காக போராடி யதை அடுத்து ரேசன் பொருட்கள் கொடுக்கப்பட்டது.

இதனையடுத்து பேகம்பூர் மக்க ளுக்கு காய்கறிகள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இந்த சூழ்நிலைகளில் மக் கான் தெருவில் உள்ள இஸ்லாமியர்கள் ஒருநாள் தடுப்புகளை உடைத்து கொண்டு வெளியே வந்தார்கள். அரசுக்கு எதி ராக கோஷம் போட்டார்கள். ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டார்கள். இந்நிலையில் வனத்துறை அமைச்சர் சீனிவாசன், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் இஸ்லாமிய அமைப்புகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். பேச்சு வார்த்தையின் அடிப்படையில் பால் பாக்கெட்டுகள் முதல் காய்கறி வரை மற்றும் மளிகை பொருட்கள் கிடைக்க நட வடிக்கை எடுக்கப்பட்டது. ஆனாலும் கெடுபிடிகள் தொடர்ந்தன.

இது ஒருபுறமிருக்க, வங்கதேசத்தில் இருந்து சுற்றுலா விசாவில் வந்த 11 பேர் திண்டுக்கல் பேகம்பூரில் தங்கி யிருந்தனர். அவர்கள் பேகம்பூருக்கு வந்த சமயத்தில் தான் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.  போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்த நிலையில் வங்கதேசத்தைச் சேர்ந்த  11 பேரும் வேறு வழியின்றி பேகம்பூர் பள்ளி வாசலில் தங்க நேர்ந்தது. அதே சமயத்தில் அவர்களுடைய விசா கால மும் முடிந்து போனது. இந்நிலையில் திண்டுக்கல் பேகம்பூர் பகுதியில் மத பிரச்சாரம் செய்ததாக கூறி, கடந்த வாரம் போலீசார் அவர்களை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர் களுக்கு கொரோனா தொற்று உள்ளதா என பரிசோதனை செய்ய திண்டுக்கல் மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார்.

இதனையடுத்து திண்டுக்கல் அரசு மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்ட 11 பேருக்கும் தோற்று இல்லை என கூறப் பட்டது. இதனை அடுத்து விசா காலம் முடிந்து தங்கியிருந்த குற்றத்திற்காக அந்த 11 பேரும் பலத்த போலீஸ் பாது காப்புடன் சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு மீண்டும் பரிசோதனை செய்த மருத்து வர்கள் கொரோனா தொற்று அறிகுறி இருப்பதாக கூற அந்தப் பதினொரு பேரும் சென்னை ராஜாஜி அரசு மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டனர். வங்கதேசத்தை சேர்ந்தவர்களுக்கு பாதுகாப்பாக சென்ற 17 போலீசா ருக்கு தொற்று உள்ளதா என திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரி சோதனை செய்து வீட்டில் தனிமையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட் டுள்ளனர்.

கர்ப்பிணிப் பெண்களை...

இந்நிலையில் கிழக்கு பகுதியில் இருந்து மருத்துவமனைகளுக்கு செல் லும் நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு தனியார் மருத்துவமனை நிர்வாகங்கள் சிகிச்சை அளிக்க மறுத் தன. ஸ்கேன் மையங்களில் கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் எடுக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து நிறை மாத கர்ப்பிணி பெண்கள் நூருல் அம்மு கஷா, அனிஸ், ஷாகிரா, தாகிரா ஆகிய நான்கு பேரும் கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் மகப்பேறுக்காக சேர்க்கப்பட்டனர்.

ஆனால் மருத்துவமனை நிர்வாகம் நான்கு கர்ப்பிணிப் பெண்களையும் கொரோனா சிகிச்சை பிரிவில் சேர்த் தது. இந்த சம்பவம் கேள்விப்பட்டு தவ் ஹீத் ஜமாத் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் மருத்துவமனை நிர்வா கத்திற்கு தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்தனர் மருத்துவத் துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடு பட்டனர். அதன்பிறகு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு புகார் அளித்த னர். இதனையடுத்து மூன்று கர்ப்பிணிப் பெண்கள் மகப்பேறு பிரிவுக்கு மாற்றப் பட்டனர். அந்த மூன்று கர்ப்பிணிப் பெண் களுக்கும் குழந்தைகள் பிறந்தன.

சாகிரா என்ற பெண்ணுக்கு அடுத்த மாதம் பிரசவம் என்பதால் அவரை மீட்டு ஒரு இஸ்லாமிய மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த போராட்டத்தில் ஆட்சி யரிடம் புகார் செய்த சிலரை எப்படியா வது கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட காவல்துறை நிர்வாகம் தீவிர மாக செயல்பட்டது. போராடியவர்கள் சில வழக்கறிஞர்கள் என்பதால் இந்த திட்டம் பின்னர் கைவிடப்பட்டது. ஆனால் ஞாயிற்றுக்கிழமை நூருல் அம்மு ஹசா என்ற பெண்ணை பிறந்த குழந்தை யுடன் கொரோனா சிகிச்சை பிரிவிற்கு மாற்றினர்.

இதனையடுத்து நூருல் அம்மு ஹசாவின் தந்தை கடுமையாக ஆட்சேபித்ததை தொடர்ந்து மீண்டும் அந்தப் பெண்ணை மகப்பேறு பிரிவுக்கு கொண்டு வந்தனர். ஆனால் இந்த மூன்று இஸ்லாமிய பெண்கள் உள்ள மகப்பேறு பிரிவில் கோவிட் 19 பிரிவு என்று தகவல் பலகை வைத் துள்ளனர். தொடர்ந்து பேகம்பூர் பகுதி மக்கள் கொரோனாவை காரணம் காட்டி மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலைமாறுமா என் பதுதான் இப்பகுதி மக்களின் ஏக்க மாக உள்ளது.

- இலமு