சென்னை, மார்ச் 8- இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தென் மண்ட லத்தின் மண்டல சேவைகள் பிரிவு செயல் இயக்குநராக தனபாண்டியன் பொறுப் பேற்றுள்ளார். இவர் தமிழ்நாடு, தெலுங் கானா, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா,கேரளா மற்றும் புதுச்சேரி லட்சத் தீவு யூனியன் பிரதேசங்கள் அடங்கிய தென் மண்ட லத்திற்கான செயல் இயக் குநராக செயல்படுவார். தனபாண்டியன் மனித வளம், நிதி, சமையல் எரிவாயு & எரிபொருள் போக்குவரத்து, ஒப்பந் தங்கள், விலை நிர்ணயம், தரக் கட்டுப்பாடு மற்றும் கார்ப்பரேட் தகவல் தொடர்பு உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு மண்டல அளவில் பொறுப்பேற்று செயல்படுவதோடு, தென் மண்டல மாநிலங்களுக்கான எண்ணெய் மற்றும் எரி வாயுத் துறைக்கான மண்டல அளவு ஒருங்கிணைப் பாளராகவும் செயல்பட உள்ளார். இதற்கு முன்பு அவர் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களில் உள்ள இந்தியன் ஆயிலின் எல்.பி.ஜி பிரிவிற்கு தலை வராக பணியாற்றியுள்ளார். திருச்சி மண்டல பொறி யியல் கல்லூரியிலிருந்து சிவில் பொறியியல் பட்டத் தைப் பெற்றுள்ள தனபாண்டியன் விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்.