தயாரிப்பு நிலையிலேயே விரிவான திட்ட அறிக்கை புதுக்கோட்டை நான்கு வழிச்சாலை பணிகள் தொடர்ந்து தாமதம்
திருச்சி, ஜூன் 4- திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையை இரண்டு வழிப் பாதையிலிருந்து நான்கு வழிப்பாதை யாக விரிவாக்கும் திட்டம், விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிப்பு நிலை யிலேயே சிக்கியுள்ளது. இதனால், சாலைப் பயனர்கள் மற்றும் ஆர்வலர் கள் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தி ற்கு (NHAI) வேகமாக நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளனர். 2021இல் திருச்சி-கரைக்குடி 90 கிலோமீட்டர் பகுதி பக்கவாட்டு தாங்கல் பாதை களுடன் விரிவாக்கப்பட்டாலும், அதை முழுமையான நான்கு வழிச்சாலையாக மாற்றும் திட்டம் இதுவரை முன்னேற்ற மடையவில்லை. ஆதாரங்களின்படி, விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு பல ஆண்டுகளாக நடந்து வருகிறது, எப்போது பணிகள் தொடங்கும் என்பதற்கான உறுதியான காலக்கெடு எதுவும் இல்லை. ஒரு வருடம் ஆகலாம் இந்நிலையில், இதுதொடர்பாக தேசிய நெடுஞ்சாலை அதிகாரி ஒருவர் கூறுகையில், “விரிவான திட்ட அறிக்கை தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் பல்வேறு காரணி களால் தாமதங்களை எதிர்கொண்டுள் ளது. இது 2026ஆம் ஆண்டுக்குள் இறுதி செய்யப்படும், அது நடந்தவுடன், நான்கு வழிச்சாலைப் பணிகள் உடனடியாகத் தொடங்கப்படும்” என அவர் தெரிவித்தார். இதற்கிடையில், மாத்தூர் அருகே உள்ள கைனங்கரைக்கும் துவாக்குடி அரை வளைய சாலை சந்திப்பிற்கும் இடையிலான 3 கி.மீ பகுதியை வலுப்படுத்தும் பணியை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்டுள்ளது. இந்த பகுதி, பக்கவாட்டு பாதைகள் இல்லாததால், பாதுகாப்பு பிரச்சனைகள் உள்ளன. இதனால் அடிப்படை இருவழிச் சாலை யாகவே உள்ளது. இது பயணி களிடையே பாதுகாப்பு கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மண் அள்ளும் இயந்தி ரங்கள், செடிகளை அகற்றி, கிழக்குப் பகுதியை சமன் செய்யும் பணியில் ஈடுபட்டு, அகலப்படுத்துவதற்குத் தயா ராகின்றன. உள்ளூர்வாசிகள் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளனர், இருப்பினும் பலர் இது நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது என குற்றம்சாட்டியுள்ளனர்.