tamilnadu

img

ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள்

சென்னை, ஜன.9- தமிழகத்தில் கொரோனா  பர வலை கட்டுப்படுத்தும் நடவடிக்கை யாக ஞாயிறன்று  (ஜன.9)  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக தலைநகர் சென்னை உள்பட மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடின. பால், மருந்து, குடிநீர்  உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.  உணவு நிறுவனங்கள் ஆட்கள் மூலம் உணவு விநியோகம் செய்ய அனுமதிக்கப்பட்டது    சென்னை கோயம்பேடு மொத்த காய்கறிச் சந்தையின் அனைத்து நுழைவு வாயில்களும் மூடப்பட்டன. மேலும் கிருமி நாசினி தெளிக்கப் பட்டு அந்த பகுதி முழுவதும் சுத்தப் படுத்தும் பணி நடைபெற்றது.  தலைநகர் சென்னை சென்னை முழுவதும் 16 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டனர். 372 இடங்களில் காவல் தடுப்புகள் அமைத்து வாகன சோதனைகள் நடைபெற்றன. தேவையின்றி வாகனங்களில் வரு வோர் நிறுத்தப்பட்டு அபராதம் வசூ லிக்கப்பட்டது. தாம்பரத்தில் 72 இடங்களில் வாகன சோதனை நடைபெற்றது.

 1200  போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடு பட்டனர். ஆவடியில் 109 இடங் களில் வாகன தணிக்கை நடைபெற் றது. 1750 போலீசார் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டனர். மேலும் ரோந்து வாக னங்கள் மூலம், போலீசார் கண்கா ணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். முன் களப்பணியாளர்களான டாக்டர்கள், வருவாய் துறையினர், தூய்மை பணி யாளர்கள் ஆகியோர் தங்களது பணி களை மேற்கொள்ள தடையின்றி அனுமதிக்கப்பட்டனர். சென்னையில் 38 பெரிய பாலங் கள் சனிக்கிழமை இரவே மூடப்பட் டன. ஞாயிறு  காலையிலும் அந்த  பாலங்களில் போக்குவரத்து நடை பெறாத வகையில் தடுப்புகளை காவல் துறையினர் அமைத்து இருந்தனர்.  சென்னையில் உள்ள முக்கிய சாலைகள் அனைத்தும் சீல் வைக்கப் பட்டது போன்று காணப்பட்டது. அண்ணா சாலைக்குள் நுழைவ தற்கு இருபுறமும் பல சிறிய சாலை கள் உள்ளன. இந்த சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. அண்ணாசாலையில் எல்ஐசி, தேனாம்பேட்டை, நந்தனம், சைதாப் பேட்டை உள்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்புகளை அமைத்து காவல்துறையினர் கண்காணித்தனர். வேப்பேரி ரித்தர்டன் சாலை, புரசைவாக்கம் டானா தெரு ஆகியவற்றில் இரும்பு தடுப்புகளை வைத்து யாரும் செல்ல முடியாத அளவுக்கு கட்டி வைத்திருந்தனர். இப்படி சென்னை மாநகர் முழுவதும் சாலைகள் மூடப்பட்டு இருந்ததால் அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டவர்களும் தங்கள் இடங்களுக்கு சுற்றியே செல்ல முடிந்தது.

மின்சார ரயில்கள் இயக்கம் முழு ஊரடங்கின்போது பேருந்து, ஆட்டோ, மெட்ரோ ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோதிலும் சென்னையில் முன்களப்பணியாளர்களுக்காக புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன. மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட அனைத்து மாநகரங்களிலும் இத்தகைய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. முதல்வர் இன்று ஆலோசனை இந்நிலையில் மாநிலத்தில் கொரோனா தொற்று மிகவேகமாக பரவி வருதையடுத்து மேற்கொண்டு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து மூத்தஅமைச்சர்கள் சுகாதாரத்துறை உயர்அதிகாரிகள், மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திங்கட்கிழமை ஆலோசனை நடத்துகிறார்.இந்த கூட்டம் தலைமைச் செயலகத்தில் காலை 10 மணிக்கு தொடங்கும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிப்பது குறித்தும் சனிக்கிழமையும் முழு ஊரடங்கு பிறப்பிப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.