tamilnadu

சிபிஎஸ் திட்டம் ரத்து கோரி மார்ச் 22 இல் ஆர்ப்பாட்டம் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

சென்னை, மார்ச் 10- தேர்தல் அறிக்கையில் கூறிய படி சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மார்ச்  22இல் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக இந்தியப் பள்ளி  ஆசிரியர் கூட்டமைப்பு அறிவித் துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி யின் பொதுச்செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: தேர்தல் அறிக்கையில் கூறிய வாறு தமிழக அரசு தனது ஊழி யர்களுக்கு சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக் கையை வலியுறுத்தி செவ்வாய்க் கிழமை (மார்ச் 22) மாலை தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநக ரங்களில் தமிழக அரசின் கவ னத்தை ஈர்க்கும் வகையில் இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமை ப்பின் சார்பில் “கவன ஈர்ப்பு ஆர்ப் பாட்டம்” நடைபெற உள்ளது. பங்கேற்புடன் கூடிய ஓய்வூதிய திட்டம்  ரத்து, தேசியக் கல்விக் கொள்கை 2020 ரத்து, பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாத்தல் உள் ளிட்ட ஊழியர் நலன், மக்கள் நலன், தேச நலன் சார்ந்த பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி 10 மத்திய தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பல் வேறு ஊழியர் அமைப்புகள் சார் பில் மார்ச் 28, 29 ஆகிய இரண்டு  நாட்கள் நடைபெற உள்ள அகில  இந்தியப் பொது வேலை நிறுத்தத் தில் தமிழ்நாட்டில் இந்தியப் பள்ளி  ஆசிரியர் கூட்டணியில் அங்கம் வகிக்கும் 9  இணைப்புச் சங்கங் களை சேர்ந்தவர்களும் பங்கேற் கிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.