tamilnadu

img

தனிச்சட்டம் இயற்றிடக் கோரி ஏப்.20ல் ஆர்ப்பாட்டம்

சேலம், ஏப். 16 - கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டிய லினப் பெண்ணை திருமணம் செய்த தற்காக தந்தையே தன் மகனை சாதி ஆணவப் படுகொலை செய்து, தடுக்க வந்த தன் தாயாரையும் கொலை  செய்ததோடு, மருமகளான பட்டிய லினப் பெண் அனுசுயாவையும் வெட்டி  வீழ்த்தியுள்ள பயங்கரம் நடந்துள்ளது. படுகாயம் அடைந்த அனுசுயா  சேலம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  இக்கொடூரமான படுகொலை களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் வன்மையாக கண்டித்துள்ளன.  இந்நிலையில் சேலம் அரசு மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனுசுயாவையும், அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களையும் ஞாயி றன்று நேரில் சந்தித்து தமிழ்நாடு  தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் கே.சாமுவேல் ராஜ், மாநில துணைத் தலைவர் ஜி. ஆனந்தன், மாநில துணைப் பொதுச் செயலாளர் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டச் செயலாளர் மேவை. சண்முக ராஜா, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலச் செயலாளர் ஜி.ராணி, சிபிஎம் சேலம் வடக்கு மாநகர செய லாளர் என்.பிரவீன்குமார்,

தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலை வர் ஆர்.குழந்தைவேல், மாதர் சங்க  மாவட்டத் தலைவர்கள் ஞான சௌந்தரி, ஆர்.வைரமணி, ஜி.தேவி, பெருமா உள்ளிட்டோர் விபரங்கள் அறிந்து, ஆறுதல் கூறினர். இதைத்தொடர்ந்து செய்தி யாளர்களிடம் பேசிய கே.சாமு வேல்ராஜ், “தமிழ்நாட்டில் தொடர்ச்சி யாக சாதி ஆணவப் படுகொலைகள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.சாதி ஆணவப் படுகொலை செய்கிற குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.ஆனால் அவர்கள் விரைவிலேயே பிணையில் வெளிவருவதும், குற்றம் நிரூபிக்கப்படாமல் விடுவிக்கப் படுவதும் தொடர்கிறது. அவர்களுக்கு ஆதரவாக சாதி அமைப்புகள் பகிரங்கமாகவும், சமூக வலைதளங்களிலும்  செயல்படுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது இதன் விளைவாக சாதி வெறிப் படுகொலைகள் மீண்டும் மீண்டும் தமிழகத்தில் நிகழ்ந்து கொண்டே உள்ளன. எனவே சாதி ஆணவப் படுகொலை க்கு எதிரான தனிச் சட்டத்தை இயற்றிட வலியுறுத்தி ஏப்ரல் 20 அன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களி லும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்”  என்று தெரிவித்தார்.