பழனி ரயில்வே பீடர் சாலையில் உள்ள தந்தை பெரியார் சிலையை சாலை விரிவாக்கப் பணிக்காக அகற்ற வேண்டும் என்று இந்து அமைப்பினர் வற்புறுத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து, திராவிட இயக்கங்களைச் சேர்ந்த பல்வேறு அமைப்பினர் சிலை அருகே திரண்டனர். பதற்றமான சூழல் நிலவுவதால் 24 மணி நேர பாதுகாப்பிற்கு காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது.