விருதுநகர், ஜன.,19- புதுக்கோட்டை மாவட் டம், வேங்கை வயல் கிரா மத்தில் மேல்நிலை நீர்த் தேக் கத் தொட்டியில் மலம் கலந்த சமூக விரோதிகளை கைது செய்யக் கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் சார்பில் விருதுநக ரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத் திற்கு மாநிலக்குழு உறுப்பி னர் எம்.ஊர்காவலன் தலை மையேற்றார். துவக்கி வைத்து மாவட்ட செயலாளர் கே. முருகன் பேசினார். முடி வில் மாவட்டத் தலைவர் எம். முத்துக்குமார் கண்டன உரையாற்றினார். மேலும் இதில் மாநிலக்குழு உறுப்பி னர் எஸ்.லட்சுமி, மாவட்ட பொருளாளர் எம்.சுப்புராம், விஜயபாண்டி, ராமர், ஜெய பாரத், பால்பாண்டி ஆகி யோர் உட்பட பலர் பங்கேற்றனர்.