tamilnadu

img

காமராசர் பல்கலை., விழாவில் ஆளுநர் அத்துமீறல்

மதுரை, ஜூலை 13-  தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறையை புறக்கணித்து மதுரை காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மற்றும்  தமிழகத்திற்கு எதிராக  செயல்படும் ஆர்.எஸ்.எஸ் செயற்பாட்டாளரான ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து திருவள்ளுவர் சிலை அருகில் புதனன்று மதுரை மாவட்ட அனைத்து ஜனநாயக இயக்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜயராஜன், மாவட்டச் செய லாளர் மா.கணேசன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜா.நரசிம்மன், சிபிஐ சந்தானம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் மு.தமிழ்பித்தன், திரா விடர் விடுதலைக் கழகம் மணிய முதன், காமாட்சி, பாண்டியன், சத்திய மூர்த்தி, தமிழ் புலிகள் பேரறிவாளன், அதிமமுக பசும்பொன் பாண்டியன், ஆதி தமிழ் கட்சி விடுதலைவீரன், ஆதி தமிழர் பேரவை செல்வம், புரட்சிகர இளைஞர் முன்னணி குமரன், தமிழக வாழ்வுரிமை கட்சி சித்திக், தமுமுக முகமது கவுஸ், சீனி அகமது, மககுக இராமலிங்கம், தமிழ்நாடு சுயாட்சி கட்சி தங்க பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  ஆர்ப்பாட்டத்தில், ஆளுநர் வரு கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஒன்றிய  அரசுக்கு ஆதரவாக செயல்படுவதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப் பட்டன. இதைத்தொடர்ந்து போராட்டத் தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.