tamilnadu

சிபிஎம் பெண் ஊழியர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் இந்து முன்னணிக்கு ஜனநாயக மாதர் சங்கம் கடும் கண்டனம்

சிபிஎம் பெண் ஊழியர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் இந்து முன்னணிக்கு ஜனநாயக மாதர் சங்கம் கடும் கண்டனம் 

சென்னை, ஜூன் 21 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பெண் ஊழியர்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய இந்து முன்னணிக்கு அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் கடும் கண்டனம்  தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத்  தலைவர் எஸ்.வாலண்டினா, மாநில  பொதுச் செயலாளர் அ.ராதிகா ஆகி யோர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் திண்டுக்கல் மாவட்டத் தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு இயக்கத்திற்குள் புகுந்து, இந்து முன்னணியினர் திண்டுக்கல் ஒன்றியச் செயலாளர் சரத்குமார் உள்ளிட்ட தோழர்கள் மீது கடுமை யானத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.  தாக்குதலில் காயமடைந்த சரத் குமாரை திண்டுக்கல் அரசு மருத்துவ மனையில் பார்க்கச் சென்ற மாவட்டக்  குழு உறுப்பினர் பாக்கியம், மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜெயந்தி மற்றும் மேரி ஆகியோர் மீதும், மார்க்சிஸ்ட் கட்சி தோழர்கள் மீதும் கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளனர். கருத்தை கருத்தால் எதிர் கொள்ள இயலாமல் வன்முறையை மட்டுமே நம்பி அரசியல் நடத்தும்  இந்து முன்னணியின் இச்செயலுக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கடும் கண்டனத்தை தெரி வித்துக் கொள்கிறது.  மேலும் அறம் சார்ந்த அர சியலையும், மதச்சார்பின்மையை யும் உயர்த்திப் பிடிக்கும் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியில் பயணித்து, மக்கள் போராட்டங்களில் பங்கேற்ற பெண்களை தாக்கும் செயல் என்பது தமிழகத்தில் முற்போக்கு இயக்கங்களில் பங்கேற்கும் பெண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சவாலாகும்.  தமிழ்நாட்டில் அமைதியை விரும்பும் அனைத்து அரசியல் கட்சிகளும், மகளிர் அமைப்பு களும், முற்போக்கு இயக்கங்களும் இத்தாக்குதலை ஒன்றிணைந்து கண்டிக்க வேண்டும் என அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின்  சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.  நியாயமான போராட்டத்தில் பங்கேற்ற பெண்களை இரவு 11 மணி  வரை சட்டவிரோதமாக காவலில் வைத்த திண்டுக்கல் மாவட்ட காவல் துறையின் செயல்பாடு ஏற்புடையது  அல்ல. அமைதியாக ஜனநாயக வழி யில் நடைபெறும் போராட்டங்களுக் குள் புகுந்து வன்முறையில் ஈடுபடு வது, பெண்களை தாக்குவது என அராஜகத்தில் ஈடுபட்டுள்ள இந்து முன்னணி மீது கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.  வன்முறைகளை கையில் எடுப்ப தன் மூலம் ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிரான குரல்களை ஒடுக்கி விட  முடியாது. பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக,  குறிப்பாக பெண்கள் விரோத கொள் கைகளுக்கு எதிராக தமிழகம் முழு வதும் பெண்களைத் திரட்டி தீரமிக்க  போராட்டங்களில் பங்கேற்போம். இவ்வாறு அவர்கள் தெரிவித்து உள்ளனர்.