பழனி, ஜன.9- ரூ.2 ஆயிரம் உதவித் தொகை வழங்கக் கோரி ஜன.24-ஆம் தேதி ஆட்சியர் அலுவலகங்களில் ஆர்ப் பாட்டம் நடத்துவது என மாற் றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் பழனி யில் நேற்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் வில்சன் தலைமை வகித்தார். மாவட் டச் செயலாளர் நூருல்ஹுதா முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் ஜான்சி ராணி, பொருளாளர் சக்கர வர்த்தி, திண்டுக்கல் மாவட் டச் செயலாளர் எஸ்.பகத்சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து ஜான்சிராணி கூறி யதாவது: தமிழகத்தில் மாற்றுத்திற னாளிகள் நலத்துறை சார் பில் ரூ.2 ஆயிரம் உதவித் தொகை கேட்டு, விண்ணப் பித்து 18 மாதங்களாகப் பலர் காத்திருக்கின்றனர். உத வித்தொகையை விரைந்து வழங்க வலியுறுத்தி ஜன. 24-ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்குத் தினசரி நான்கு மணி நேரம் வேலை, முழுச் சம்பளம் ஆகியவற்றை வலியுறுத்தி அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு பிப்ரவரி 21-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார். மேலும் அவர் கூறுகை யில் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் மாற்றுத்திற னாளிகளுக்கு அடிப்படை வசதிகள், தனிப்பாதை அமைக்க வேண்டும். இதற்கு அரசு உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றார்.