ராணிப்பேட்டை,நவ.9- இராணிப்பேட்டை: மாவட்டம் அரக்கோணம் அடுத்த பெருமூச்சி அரசு நடுநிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சனிக்கிழ மையன்று திடீர் ஆய்வு மேற்கொண் டார். அப்போது அவர் செய்தியாளர்க ளிடம் கூறுகையில், ‘’ இந்தியாவில் எத்தனையோ மாநிலங்களில் ஆசிரி யர்கள் இருந்தாலும், தமிழகத்தை சேர்ந்த ஆசிரியர்களை போல் இல்லை. அவர்கள் மாணவர்க ளுக்கு நன்றாக பாடம் நடத்துகின்ற னர். சட்டமன்ற வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு கல்வித்துறை க்கு முதல்வர் ஸ்டாலின் ரூ. 44 ஆயி ரத்து 42 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள் ளார். அரசு தொடக்கப் பள்ளிகளில், மாணவர்களின் சேர்க்கை விகிதம் அதிகரித்து வருகிறது. ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே 98.8 சதவீத மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புதிய வகுப்பறை கட்டிடங்கள், ஆய்வகங்கள், புதிய ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். 2026 ஆம் ஆண்டுக்குள், 19 ஆயிரம் ஆசிரியர்களை உள்ளே கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது’’ என்று தெரி வித்தார்.