tamilnadu

img

ஜோதி ஸ்ரீதுர்கா மரணம்.. மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்...

நீட்தேர்வு மன அழுத்தத்தால் ஜோதி ஸ்ரீதுர்கா என்ற மாணவி மதுரையில் உயிரை மாய்த்துக்கொண்டார். அவரது மரணத்திற்கு நீதி கேட்டும்  நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். இறந்த மாணவியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சனிக்கிழமை மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய மாணவர் சங்க மாநில செயலாளர் வி. மாரியப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் இரா. விஜயராஜன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஜா. நரசிம்மன், அ. ரமேஷ், வை. ஸ்டாலின், ஆர். சசிகலா மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள், பகுதிக்குழுச் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

;