தேனி, ஜன.7- மயிலாடும்பாறையில் வேலை வாங்கித் தராத நிலையில் பணத்தை திருப்பிக் கேட்ட தால் ஆத்திரமடைந்த ஊராட்சி தலைவரின் கணவர், தனது தோட்டத்தை ஜேசிபி இயந்தி ரத்தைக் கொண்டு சேதப்படுத்தியதால் தலித் விவசாயி ராஜா என்பவர் தற் கொலைக்கு முயன்றார். அவரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறினர். கடமலை மயிலை ஊராட்சி ஒன்றியத் திற்குட்பட்ட மயிலாடும்பாறை ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் அன்பில் சுந்தர பாரதம். இவர் , அதே ஊரைச் சேர்ந்த ராஜா என்பவரிடம் ஊராட்சியில் வேலை வாங்கி தருவதாக ரூ.3.50 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது .பணத்தை பெற்றுக் கொண்டு வேலை வாங்கி தராத நிலையில் பணத்தை திரும்ப கேட்டுள்ளதாக தெரி கிறது. இதனால் ஆத்திரமடைந்த . அன்பில் சுந்தர பாரதம், ராஜாவுக்கு சொந்தமான தோட்டத்தை, சட்டத்திற்கு புறம்பாக ஜேசிபி இயந்திரத்தை கொண்டு 25-க்கும் மேற்பட்ட முருங்கை மரங்களை அழித்துள்ளார். இத னால் மனமுடைந்த ராஜா ,அரளி விதையை உண்டு ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆறுதல் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வரும் ராஜா வை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்டச் செயலாளர் ஏ.வி .அண்ணா மலை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.முருகன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் இ .தர்மர் ஆகியோர் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர் . அன்பில் சுந்தர பாரதத்தின் மீது உரிய சட்ட பிரிவுகளில் நடவடிக்கை எடுக்க வேண் டும், வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய பணத்தையும், நிலத்திற்கு உண்டான இழப் பீடையும் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்தை கட்சி யின் தேனி மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.