tamilnadu

img

குறுக்கு வழி - கோவி.பால.முருகு

‘அப்பா..இந்த வருஷமாவது ஊட்டிக்கு அழைச்சிகிட்டுப் போங்கப்பா….ரொம்ப நாளா மலர்க் கண்காட்சியைப் பாக்கணும்னு ஆசையா இருக்குப்பா” “சரிடா தங்கம் அடுத்தவாரம் சம்மர் ஹாலிடே   வருதுல்ல அப்ப கண்டிப்பா நாம எல்லாரும் ஊட்டிக்குப் போறோம் சரியா?’’ என்று அப்பா சொன்னவுடன் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துக் கொண்டு நண்பர்களிடம் சொல்ல வெளியே ஓடினான் தமிழ்ச்செல்வன். அன்று ஊட்டிக்குக் கிளம்பும் மகிழ்ச்சியில் வீடே களை கட்டி யிருந்தது.காலை பத்து மணிக்கெல் லாம் கார் ஓட்டுநர் வந்தார்.தயாராக  இருந்தவர்கள் காருக்குள் ஏறி அமர்ந்தனர்.அவர்களுக்கு ஒரே பையன் ரொம்ப செல்லம் கொடுத்து  வளர்த்து வந்தார்கள்.மேட்டுப்பாளை யத்திலிருந்து மலைமேலே ஏறத்  தொடங்கியவுடன்.தமிழ்ச்செல்வ னுக்கு மகிழ்ச்சி பெருக்கெடுத்து ஓடத்  தொடங்கியது.ஒவ்வொரு கொண்டை ஊசி வளைவில் ஏறும்போ தும்,கிடுகிடு பள்ளத்தாக்கைப் பார்க்கும் போதும் ஓவென்று சத்தம்  போட்டு தன் மகிழ்ச்சியை வெளிப் படுத்தினான். மேலே செல்லச் செல்ல மேகக் கூட்டம் கீழே தவழ்ந்து வருவதைப் பார்த்த தமிழ் “அங்கிள்..காரை ஓரமா நிறுத்துங்க இறங்கிப் பார்க்கணும்” என்றவுடன் ஓட்டுநர் ஓரமாக காரை நிறுத்தினார்.இறங்கியவனின் மேலே  மேகம் புகுந்து சென்றது.நன்றாகக்  குளிர ஆரம்பித்தது.அம்மாவிடம் சொட்டரை வாங்கிப் போட்டுக் கொண்டவன் அங்கேயே இயற்கை யின் அழகைச் சுவைத்தபடியே சிறிது  நேரம் நின்றான்.”தமிழ்..நேரமாகுது..வா சீக்கிரம் அங்க போயி பார்க்க  வேண்டாமா!” என்று அப்பா சொன்ன வுடன்”அப்பா..நாமதான் அங்க மூனு  நாளு இருக்கப் போறோமே ஏன் அவ சரப்படுறீங்க”என்றவன்  காரில் ஏறிக்கொண்டான்.

ஊட்டியின் மேலே சென்றவுடன் அவர்கள் பதிவு செய்திருந்த அரசு  விருந்தினர் மாளிகையின் அறையை  அடைந்தனர். அறை பெரிதாகவும் அழகாகவும் நிறைய பேர் தங்குமள விற்கு படுக்கை வசதி கழிப்பறை என  அனைத்தும் சிறப்பாக இருந்தது.வெளியே பெரிய ஹோட்டலும் இருந்தது.அறையில் சிறிது நேர  ஓய்வுக்குப் பின் காரை எடுத்துக் கொண்டு,வெளியில் இருந்த உணவு விடுதியில் காலை சிற்றுண்டி யை முடித்துக் கொண்டு  பார்க்க வேண்டிய இடங்களுக்குப் பயணமா னார்கள். முதலில் ஊட்டியின் முக்கியமான  ஏரிக்குச் சென்று படகுச் சவாரி செய்த னர்.அடுத்து ரோஸ் கார்டனுக்குச் சென்றார்கள்.பவகையான வண்ண வண்ண ரோஜா மலர்களைக் கண்ட மகிழ்ச்சியில் கண்கள் விரியப் பர வசம் அடைந்தனர்.ஒவ்வொரு இடத்திலும் தன்னிடமிருந்த விலையுயர்ந்த கேமராவால்  பூங்கா வின் அனைத்துப் பகுதிகளிலும் அனைவரும் நின்று பலவகையாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்படியே பக்கத்தில் இருக்கும் தாவரவியல் பூங்காவில் நுழைவுச் சீட்டை எடுத்துக் கொண்டு உள்ளே  சென்ற தமிழுக்கு மகிழ்ச்சி எல்லை யைக் கடந்தது.துள்ளிக் குதித்து புல்வெளியில் விழுந்து புரண்டான்.இப்படி ஒரு காட்சியை முதன் முறை யாகக் காணும் அவன் வேறு உல கத்தில் இருப்பதுபோலவே உணர்ந்து  கொண்டான்.

எல்லா இடங்களையும் பார்த்த பிறகு மலையின் மேலே இருக்கும் ஊட்டியின் பழங்குடி மக்களான தோடர்கள்,படுகர்கள் வாழும் பகுதிக்குச் செல்ல மலை ஏறினர்.தமிழுக்கு அது பெரிய துன்பத்தை தரவில்லை.ஆனால் அவனுடைய அப்பாவும் அம்மாவும் ஏறுவதற்குச் சிரமப் பட்டனர்.எப்படியோ ஒரு வழி யாக மேலே ஏறி அவர்கள் வாழும்  இடத்திற்குச் சென்றனர். அவர்களின்  வீடும் கோயிலும் முற்றிலும் மாறுபட்டி ருந்ததைப் பார்த்துவிட்டு அங்கிருந்த தோடர்களோடும் படுகர்களோடும் புகைப்படம் எடுத்துக் கொண்டு இறங்க ஆரம்பித்தனர். அப்போதுதான் அவனுடைய அப்பா அம்மா கவனிக்காத நேரத்தில், மலைச் சரிவின் வழியாக இறங்கி னால் விரைவில் கீழே போய்விட லாம் என்ற எண்ணத்தில் இறங்க ஆரம்பித்தான்.மழை பெய்து கொஞ்சம் ஈரமாகவும் இருந்தது.சரிவு  ரொம்பவும்  சாய்வாக இல்லாததால் முன்னோக்கித் தள்ள ஆரம்பித்தது.கட்டுப் படுத்த முடியவில்லை.போகப் போக வேகம் அதிகமாகி யது.எதையும் பிடித்துத் தடுத்து நிற்கவும் முடியவில்லை. திரும்பிப் பார்த்த அவனுடைய அப்பா நிலை குலைந்து போனார். என்ன செய்வ தென்று தெரியாமல், என்ன ஆகுமோ  என்ற அச்சத்தோடு நடுங்கிக் கொண்டி ருந்தார். வேகத்தைக் கட்டுப்படுத்த முடி யாத தமிழ் கடைசியாக கீழே இருக்கும் சிமென்ட் சாலையில் எம்பிக் குதித்தான். வந்த வேகத்தில்  தொப்பென்று குப்புற விழுந்து உருண்டான்.இன்னும் கொஞ்சம் வேகமாகத் துள்ளியிருந்தால் அடுத்த சரிவில் விழுந்து உருண்டு கீழே விழுந்திருப்பான்.அப்படி ஆகி யிருந்தால் உயிருக்கே ஆபத்தாய் முடிந்திருக்கும்.நெற்றியில் பட்ட அடியினால் பெரிய காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. உடம்பிலும் பலத்த  அடி அதோடு தோள் பகுதியிலும் சிராய்ப்பு ஏற்பட்டு இரத்தம் வழிந்தது.கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் நடந்து முடிந்து விட்டது. அவசர அவசரமாகப் படி யின் வழியாக அவன் அப்பாவும் அம்மாவும் இறங்கி வந்தனர். மகனின் நிலையைப் பார்த்த  அம்மா கதறி அழ ஆரம்பித்து விட்டார். வேகமாக கீழே அழைத்து வந்தவர்கள் காரில் ஏறி பக்கத்தில் இருக்கும் மருத்துவ மனைக்குச் சென்றனர்.ஒரு அரை மணிநேர சிகிச்சைக்குப் பிறகு மண்டை, கை, கால்களில்  கட்டுடன் வெளியே வந்தான். அறைக்கு வந்தவர்கள் அறையைக் காலி செய்துவிட்டு ஊருக்குக் கிளம்பினார்கள்.தமிழும்  வீட்டிற்குப் போனால் போதும் என்ற மன நிலைக்கு வந்துவிட்டான்.பயம்  இன்னும் அவனைவிட்டு விலக வில்லை .வலி பொறுக்க முடியா மல் முனகிக் கொண்டே வந்தான்.அவர்களின் இன்பச் சுற்றுலா தமிழ்ச்செல்வனின் இந்த முரட்டுத்தன மான தவறான செயலால் துன்பச் சுற்றுலாவாக மாறிப்போனது.