tamilnadu

img

கடையின் ஷட்டரை வெட்டி எடுத்து தங்க, வைர நகைகள் கொள்ளை!

சென்னை, பிப். 10- சென்னையில் கடையின் ஷட்டரை வெல்டிங் இயந்திரம் கொண்டு வெட்டி எடுத்து நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெரம்பூர் அகரம் சந்திப்பில் ஜெயச்சந்திரன் (60) என்பவருக்கு சொந்தமான ஜெ.எல் கோல்டு பேலஸ் என்ற நகை கடை உள்ளது. இந்த கடையின் கீழ் தளத்தில் பார்க்கிங் வசதியும், முதல் தளத்தில் நகைக் கடையும் உள்ளது. இரண்டாவது தளத்தில் ஜெயச்சந்திரன் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். வியாழக்கிழமை இரவு வழக்கம் போல் வியாபாரத்தை முடித்துவிட்டு ஜெயச்சந்திரன் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். மீண்டும் வழக்கம் போல் வெள்ளிக்கிழமை காலை கடையை திறக்க வந்த ஜெயச்சந்திரன் கடையின் ஷட்டர் வெட்டப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, 9 கிலோ தங்க நகைகள், ரூ.50 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் கொள்ளை அடிக்கப்பட் டிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் பெரம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.