திருவில்லிபுத்தூர் அருகே உள்ள அச்சம்தவிர்த்தான் பகுதியில் மக்காச்சோளம், சூரியகாந்தி, நெல், பருத்தி பயிரிடப்பட்டுள்ளது. தொடர்மழையால் பயிர்கள் அழுகிவிட்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் நிவாரணம் கேட்டு திருவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தை திங்களன்று முற்றுகையிட்டனர். தொடர்ந்து வட்டாட்சியர் சரவணனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.