பயிர் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் முழுமையாக இழப்பீடு வழங்கவில்லை!
திருவாரூரில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்'
திருவாரூர், ஜூன் 4 - பயிர் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் முழுமையாக இழப்பீடு வழங்காத தைக் கண்டித்தும், தூர்வாரும் பணி களையும் விரைந்து முடிக்க வேண்டும். நகை கடன் பெறுவதற்கு ரிசர்வ் வங்கி விதித்துள்ள கடும் நிபந்தனையை உடனடியாக ரத்து செய்யக் கோரியும் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் திருவாரூர் மாவட்டக் குழு சார்பாக புதனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் எஸ்.தம்புசாமி தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் கோரிக் கைகளை விளக்கி உரையாற்றி னார். முன்னதாக மாவட்டச் செயலா ளர் எம்.சேகர், மாநிலக் குழு உறுப்பினர் கே.தமிழ்செல்வி, விவ சாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.கந்தசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாவட்டப் பொருளாளர் வி.எஸ். கலியபெருமாள், மாவட்ட நிர்வாகி கள், ஒன்றிய, நகரச் செயலாளர்கள், விவசாயிகள், பெண்கள் என நூற்றுக் கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர். ஆர்ப்பாட்டத்தின் போது செய்தி யாளரிடம் மாநில பொதுச் செய லாளர் சாமி.நடராஜன் தெரிவிக்கை யில், “4 ஆண்டுகளாக விவசாயிகள் பயிர் இன்சூரன்ஸ் செலுத்தி வரு கிறார்கள். தொடர் கனமழை பாதிப்பு ஏற்படுகிறது. கணக்கெடுப் பில் நடைபெறும் குளறுபடியால் பாதிக்கப்படும் பெரும்பாலான கிரா மங்கள் இழப்பீட்டு பட்டியலில் இடம் பெறுவதில்லை. பாதிக்கப்படும் கிராமங்களுக்கு பாகுபாடு இல்லா மல் இழப்பீடு வழங்கிட வேண்டும். தூர்வாரும் பணிகளை மாவட் டம் முழுமைக்கும் முறைகேடு இல்லாமல் முறையாக ஏபிசிடி (ABCD) சேனல் பாசன வடிகால்களை ஜூன் 12 ஆம் தேதிக்கு முன்பு முடிக்க வேண்டும். வங்கிகளில் நகைக் கடன் பெறுவதற்கான நிபந்தனை களை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும்” என்றார்.