திருநெல்வேலி, பிப்.11 பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் சேந்தான்குளம் மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும். தலித் மக்கள் பயன் படுத்தி வந்த சுடுகாட்டு பாதையை ஆக்கிரமித்தவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண் டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய காத்திருப்புப் போராட் டம் வெள்ளிக்கிழமை இரவு வரை நீடித்தது. கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை காலை நாங்கு நேரி அருகே உள்ள சேந்தான் குளம் சுடுகாட்டில் குடியேறுவ தற்காக மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், மாநிலக் குழு உறுப்பினர்கள் கே.ஜி.பாஸ்கரன், பி.கற்பகம், மாவட்டச் செயலாளர் க.ஶ்ரீராம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எம்.சுடலைராஜ், ஆர்.எஸ்.துரைராஜ், எம்.பீர்முகமது. எஸ்.பெருமாள், நான்குநேரி ஒன்றியச் செயலாளர் முருகன். மாவட்டக்குழு உறுப்பி னர்கள் கு.பழனி, டி.நாராயணன், எஸ்.கே.செந்தில், எஸ்.குழந்தை வேல். கே.மாரிசெல்வம், ஓ. அருணாசலம், கிறிஸ்டோபர் , தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் டி.செல்லத் துரை. வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் அருள்ராஜ் உட்பட ஏராளமானோர் புறப்பட்டனர். சுடுகாட்டில் குடியேற அனுமதி மறுக்கப்பட்டதால் சேந்தான்குளம் கிராமத்தில் காத்திருப்புப் போராட் டம் நடைபெற்றது.
பேச்சுவார்த்தை
நிலமோசடிப் பேர்வழிகள் ஆக்கிரமித்த பொது வழிப்பாதை களில் ஒரு பகுதியில் கட்டப்பட்டி ருந்த சுவர்களை வருவாய்த் துறையினர் இடித்தனர் ஊர் முழுவதும் போடப்பட்டுள்ள இரும்புக் கம்பி வேலிகளை அகற்றப்படும். கோவில்கள் கிணறுகளை ஆக்கிரமிப்பாளர்க ளிடமிருந்து மீட்கப்படும் என அதி காரிகள் தரப்பில் தெரிவிக்கப் பட்டது. ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பிப். 14- ஆம் தேதி சேரன்மகாதேவி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்படும் என நான்கு நேரி வட்டாட்சியர், வருவாய்த் துறையினர், காவல் துறையினர் உறுதியளித்ததின் அடிப்படையில் வெள்ளிக்கிழமை இரவு போராட் டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.