tamilnadu

img

தஹானு தொகுதியில் சிபிஎம் வெற்றிப் பேரணி

நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் தஹானு (பழங்குடி) சட்டமன்றத் தொகுதியின் எம்விஏ கூட்டணி வேட்பாளரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் வினோத் நிகோல் மீண்டும் அபார வெற்றி பெற்று 3ஆவது முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தஹானு தொகுதியின் வெற்றிக் கொண்டாட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. தலசாரியில் நடைபெற்ற வெற்றிப் பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் செங்கொடிகளை ஏந்தி மகிழ்ச்சியுடன் ஊர்வலமாகச் சென்றனர். பழங்குடி பெண்களும், ஆண்களும் பாரம்பரியமிக்க “தர்பா” இசைக்கருவியின் தாளத்திற்கு நடனமாடினர். பேரணியின் பொழுது கடைக்காரர்கள், காய்கறி வியாபாரிகள், ரிக்சா ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் வினோத் நிகோல் எம்எல்ஏவுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். இந்த வெற்றிப் பேரணியில் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் அசோக் தாவ்லே, மத்தியக் குழு உறுப்பினர்  மரியம் தாவ்லே மற்றும் பலர் தலைமை தாங்கினர்.