tamilnadu

img

கல்வி வியாபாரத் தீயில் வெந்து மடிந்த 94 குழந்தைகளின் நினைவிடத்தில் சிபிஎம் அஞ்சலி

கும்பகோணம், ஜூலை 16- விதிமுறைகளை மீறி இயங்கி வந்த கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா தனியார் பள்ளி 2004 ஆம் ஆண்டு தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 94 குழந்தைகள் தீக்கிரையாகி வெந்து மடிந்தனர். 18 குழந்தைகள் படுகாயத்துடன் உயிர் தப்பினர். இச்சம்பவம் உலகையே உலுக்கியது. இந்நிலையில், அந்த 94 குழந்தை களின் 19 ஆம் ஆண்டு நினைவு தினம் ஞாயிறன்று (ஜூலை 16) கடைப்பிடிக்கப் பட்டது. இதை முன்னிட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி குழந்தைகளின் உருவப்படத்திற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். இதில் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் கோ.நீலமேகம், ஆர்.மனோ கரன், சி.ஜெயபால், அருளரசன், செந்தில் குமார், கலைச்செல்வி, மாநகர செய லாளர் செந்தில்குமார், மாமன்ற உறுப்பினர் செல்வம், சாலைப் போக்கு வரத்து சம்மேளன மாநிலச் செயலாளர் பார்த்தசாரதி மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள், மாற்றுத்திறனாளிகள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் பழ.அன்புமணி, வாலிபர் சங்க பொறுப்பாளர் ரஞ்சித் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். முன்னதாக தீ விபத்தில் இறந்த குழந்தைகளின் பெற்றோர்கள், உறவினர்கள், அரசு தலைமை கொறடா கோவி.செழியன், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன், மயி லாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், மாநகர துணை மேயர் தமிழழகன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், அனைத்துக் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.  பெற்றோர்கள் உயிரிழந்த குழந்தை களுக்கு பிடித்த உணவு தின்பண்டங்களை வைத்து, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.