tamilnadu

img

சிபிஎம் திருவண்ணாமலை மாவட்டச் செயலாளராக ப. செல்வன் தேர்வு

திருவண்ணாமலை, நவ. 18 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவண்ணாமலை மாவட்டச் செய லாளராக ப. செல்வன் தேர்வு செய்யப் பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவண்ணாமலை மாவட்ட 10-ஆவது  மாநாடு திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்காலில் நவம்பர் 16, 17, 18 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்றது. மூத்தத் தலைவர்கள் எம். வீரபத்தி ரன், அஞ்சலி, நவாப்ஜான் ஆகி யோர் தலைமை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ்  துவக்கவுரையாற்றினார். மாநிலக் குழு உறுப்பினர் இ. முத்துக்குமார் வாழ்த்திப் பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர் என். பாண்டி நிறைவுரை யாற்றினார். வரவேற்புக் குழு பொரு ளாளர் ஜி. பன்னீர்செல்வம் நன்றி கூறினார். புதிய மாவட்டக்குழு இம்மாநாட்டில் 29 பேர் கொண்ட புதிய மாவட்ட குழுவின் செயலாளராக ப. செல்வன் தேர்வு செய்யப்பட்டார். எம். சிவக்குமார், எம். வீரபத்திரன், எம்.பிரகலநாதன், இரா. பாரி, கே. வாசுகி, எஸ். ராமதாஸ், ஏ. லட்சுமணன், என். சேகரன் ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.  கோபுர குடிசை நூல் வெளியீடு முன்னதாக மாநாட்டில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பெரணமல்லூர் சேகரன் எழுதிய “கோபுர குடிசை” எனும் சிறுகதைத் தொகுப்பு நூலை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம். வீரபத்திரன் தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினர் என்.பாண்டி வெளியிட, மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலச் செயலாளர் சிவராஜ் பெற்றுக் கொண்டார்.  தீர்மானங்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி, போளூர், செய்யாறு வட்டத்தில், பட்டு கைத்தறிக்கென ஒதுக்கப்பட்டுள்ள ரகங்களை விசைத் தறியில் உற்பத்தி செய்வதால் நெசவுத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மாநில அரசு 1985 ஆம் ஆண்டு பட்டு கைத்தறி என்று ஒதுக்கப்பட்ட ரக ஒதுக்கீடு சட்டத்தை கறாராக அமல்படுத்த வேண்டும். ஒன்றிய அரசு  தேசிய அடையாள அட்டையை அனைத்து நெசவாளர்களுக்கும் வழங்க வேண்டும். அருணாச்சலம் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய பாக்கித் தொகையை மாவட்ட - மாநில நிர்வா கங்கள் உடனடியாக கிடைக்க செய்வ தற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்;  உள்ளூர் வாய்ப்புகளை பயன்படுத்தி ஜவ்வரிசி, சுண்ணாம்பு, சென்ட் தொழிற்சாலை துவங்க வேண்டும், ஆரணி பட்டு பூங்கா தொடங்க வேண் டும், பால் குளிரூட்டும் நிலையம், பாய் நெசவு மற்றும் கைத்தறி உள்ளிட்ட சிறு குறு சுயதொழில் செய்வோர்க்கும், தொழில் முனைவோர்க்கும் மாவட்ட நிதியிலிருந்து வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.