சிபிஎம் தரங்கம்பாடி ஒன்றியக்குழு அலுவலகம்
கேரள அமைச்சர் எம்.பி. ராஜேஷ் திறந்து வைத்தார்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தரங்கம்பாடி ஒன்றியக்குழு அலுவலக மான தோழர் ஏ.கே. கோபாலன் நினை வகத்தை, கேரள உள்ளாட்சித்துறை அமைச்சர் எம்.பி. ராஜேஷ் திறந்து வைத்தார். தோழர் ஏ.கே. கோபாலனின் நினைவு நாளில் (மார்ச் 22) மயிலாடுதுறை மாவட் டம் திருக்கடையூரில் சனிக்கிழமையன்று மாலை நடைபெற்ற திறப்பு விழாவிற்கு ஒன்றியச் செயலாளர் ஏ. ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி. சிம்சன் வரவேற்றார். கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் செங்கொடியை ஏற்றி வைத்தார். தோழர் ஏ.கே. கோபாலன் நினைவகத்தை, கேரள உள்ளாட்சித் துறை அமைச்சர் எம்.பி. ராஜேஷ் திறந்து வைத்தார். அலுவலக கல்வெட்டினை மாநில செயற்குழு உறுப்பினர் கே. சாமுவேல்ராஜ் திறந்து வைத்தார். தோழர்கள் எஸ். சிங்காரம், எஸ்.எத்திராஜு, டி.கே. பழனிவேல் நினைவு கூட்ட அரங்கை மாவட்டச் செயலாளர் பி. சீனிவாசன் திறந்து வைத்தார். திரு மெய்ஞானம் தியாகிகள் நினைவு நூல கத்தை கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாநிலக் குழு உறுப்பி னர்கள் வி. மாரிமுத்து, வீ. அமிர்தலிங்கம், ஏ.வி. சிங்காரவேலன் மற்றும் மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு, ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட னர். முன்னதாக செந்தொண்டர் பேரணி, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.