திருப்பூர், ஜூன் 19– திருப்பூரில் நிலவும் தொழில் நலிவுக்கு, மோடி அரசின் கொள்கைகளே காரணம். மேலும், தொழி லாளர் விரோதப் போக்கை யார் கடைப்பிடித்தாலும், அவர்களுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலுவாக போராட்டம் நடத்தும் என்று குன்னத்தூரில் தோழர் கே.தங்கவேலு நினைவகத்திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் சூளுரைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குன்னத்தூர் கிளை அலுவலகமான தோழர் கே.தங்கவேல் நினைவக திறப்பு விழா ஞாயிறன்று கருங்கல்மேடு பகுதியில், குன்னத்தூர் நகரச் செயலாளர் பா.சின்ன சாமி தலைமையில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகை யில், இங்கு திறக்கப்பட்டுள்ள அலுவலகத்தை பொது மக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த அலுவலகம் மக்கள் பிரச்சனை களுக்கு மட்டுமல்லாமல், குழந்தைகளுக்கு இரவு பாட சாலையாகவும் செயல்படுத்த வேண்டும். இன்று திருப்பூரில் நிலவக்கூடிய வேலையின்மைக்கு மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள் தான் காரணம். தென் மாவட்டங்களில் இருந்து வருபவர் களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தரும் திருப்பூர் தொழிற்சாலைகள், இப்போது நலிவை சந்தித்து வரு கின்றன. நூல் விலையேற்றம் தொடர்ந்து இங்கு உள்ள தொழில் முனைவோர்களை பாதித்து வருகிறது. ஆனால், பருத்தியை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு எந்த பலனும் கிடைப்பதில்லை. மாறாக பருத்தியை கொள்முதல் செய்யும் அம்பானி, அதானி போன்றவர்களுக்கு பெரும் லாபம் போய் சேருகிறது.
20 பைசா கூடுதலாக கொடுக்க மறுப்பு
நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள், அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஒன்றிய அரசு ஒரு நாளைக்கு வழங்கும் 80 பைசாவை ஒரு ரூபாய் ஆக்குங்கள் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். இதை ஏற்காத நிதியமைச்சர் மற்றும் மோடி அரசாங்கம் 20 பைசா கூடுதலாக கொடுத்தால் நாட்டின் பொரு ளாதாரம் என்னாகும்? என்று கேட்கிறார்கள். ஆனால், அதானி போன்ற பெரும் பணக்காரர்களுக்கு 11 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்துள்ளார்கள். மேலும், அத்தியாவசிய பொருட்களின் தொடர் விலை ஏற்றம் அனைத்து தரப்பு மக்களையும் பாதித்து வருகிறது. நமது வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் சூறையாடப்படுகிறது. ரயில்கள், விமான நிலையங்கள் என்று பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்து வருகிறார்கள். ஜியோ போன்ற தனியார் நிறுவனங் களுக்காக இந்தியா முழுக்க தொலைதொடர்பை உறுதி செய்த பிஎஸ்என்எல் நிறுவனத்தை அழித்து வருகிறார்கள்.
இப்படி பொதுத்துறை நிறுவனங்களை யும் நாட்டின் நலன்களையும் கேள்விக்குறியாக்கும் மோடி அரசுடன் அதிமுக கூட்டணி வைத்திருப்பது தமிழ்நாட்டு மக்களுக்கு செய்யும் துரோகம் என்றார். இவ்விழாவில், கட்டிட குழு செயலாளர் சா.பன்னீர்செல்வம் வரவேற்றார். கட்டிட குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி முன்னிலை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் கொடியேற்றி வைத்தார். தோழர் கே.தங்கவேல் நினைவகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார். அலுவலக கல்வெட்டை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார் திறந்து வைத்தார். தலைவர்கள் உருவப்படத்தை தாலுகா செயலாளர் எஸ்.கே. குழந்தைசாமி, சிஐடியு மாவட்ட துணைச்செயலாளர் ஜெ.கந்தசாமி ஆகியோர் திறந்து வைத்தனர். நூலக அலமாரியை மாவட்டக்குழு உறுப்பினர் கே.சரஸ்வதி திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து, கட்டிட பணியில் ஈடுபட்டவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. இதில், பழனியம்மாள் சென்னியப்பன், மேஸ்திரி செல்வம் (எ) கே.ஏ.கே. ராஜ்பரத், தாலுகா குழு உறுப்பினர் கை.குழந்தைசாமி மற்றும் கட்டிடப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பயனாடை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.