tamilnadu

img

ரூ.2029 கோடி லஞ்சம்; ரூ. 6,300 கோடி மோசடி அதானி அலுவலகத்தை முற்றுகையிட்டு சென்னையில் சிபிஎம் போராட்டம்; கைது!

சென்னை, நவ. 23 - இந்திய மக்களின் சொத்துக்களை சூறையாடும் கூட்டுக்களவாணி முத லாளித்துவத்தின் மோசடிப் பேர்வழி  அதானியைக் கைது செய்ய வலி யுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுக் கைதாகினர். இந்தியாவில் சூரியஒளி மின்சார விநியோக ஒப்பந்தங்களை பெற அரசு அதிகாரிகளுக்கு அதானி நிறுவனம் 2  ஆயிரத்து 29 கோடி ரூபாய் லஞ்ச மாக கொடுத்துள்ளது. இதற்காக அமெரிக்காவின் சட்டங்களை மீறி  அந்நாட்டில் 6 ஆயிரத்து 300 கோடி ரூபாய் நிதி திரட்டி உள்ளது. இதனால் அதானி உள்ளிட்ட 7 பேருக்கு அமெரிக்க நீதிமன்றம் தற்போது பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது. எனவே, லஞ்ச ஊழலில் ஈடு பட்டுள்ள அதானியைக் கைது செய்ய வேண்டும், சிபிஐ விசார ணைக்கு உத்தரவிட வேண்டும் என  வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அதானி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு அனுமதி மறுத்து காவல்துறையினர் சிபிஎம் ஊழியர்களை கைது செய்தனர். இத னால் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதை யடுத்து, சிபிஎம் ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் இரா. முரளி, எஸ்.கே. முருகேஷ், இ. சர்வேசன், வே. ஆறுமுகம், கே. முருகன், வெ. தனலட்சுமி, எஸ்.வி. வேணுகோபாலன் ஆயிரம் விளக்கு பகுதிச் செயலாளர் வெ. இரவீந்திரபாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா, “பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட  குற்றவாளியை பிரதமர் மோடி காப்பாற்றுகிறார். அதானியின் கொள்ளைக்கும், முறைகேடுக்கும் பிரதமர் துணையாக இருக்கிறார். மொத்த மின் தேவையில் 10 விழுக்காட்டை சூரிய ஒளி மின்சார மாக மாநிலங்கள் கொள்முதல் செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசு நிர்பந்தித்தது. அதாவது, அதானி உற்பத்தி செய்யும் சூரிய ஒளி மின்சாரத்தை ஒன்றிய பொதுத்துறை நிறுவனம் வாங்கிக் கொள்ளும். அதிலிருந்து மாநில அரசுகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றது. இதனால் மின்கட்டணம் உயர்ந்தது. அதானி லாபம் கொழிக்க, மின்கட்டணத்தை உயர்த்திக் கொண்டே இருக்கிறார்கள். பாஜகவை வெற்றி பெற வைக்க அதானி செலவிடுகிறார். அதனால் அதானியை பாஜக பாதுகாக்கிறது. இதற்கெதிராக நாடு முழுவதும் அதானி அலுவலகங்கள் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்துகிறது” என்றார்.