தேனி,ஜன.18- சின்னமனூரில் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக் கோரி காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினரை வலுக்கட்டாயமாக காவல்துறையினர் கைது செய்தனர்.இதனைக் கண்டித்து மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.பாலபாரதி திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ் சாலையில் மறியலில் ஈடுபட்டார். சின்னமனூரில் திண்டுக்கல்- குமுளி தேசிய நெடுஞ்சாலை ஒட்டிய நக ரின் மையப்பகுதியில் உள்ள எள்ளு காட்டு தெருவில் எண் 8547 டாஸ்மாக் மது பானக்கடை உள்ளது. இந்த மதுபான கடையை சுற்றிலும் வணிக வளாகங் களும் அருகே வயல்வெளிகளும் உள்ள தால் பொதுமக்களும் விவசாய பணிக்குச் செல்லும் பெண்களும் இந்தச் சாலையை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அப்பகுதி வழியாக செல்லும் பெண்களும் பொதுமக்களும் குடிமகன்களின் தொல்லையால் மிக வும் சிரமத்திற்கு உள்ளாவதால் சம்பந்தப் பட்ட கடையை வேறு இடத்திற்கு இட மாற்றம் செய்திடக் கோரி கடந்த செப்டம் பர் 12 ஆம் தேதி மாநிலச்செயற்குழு உறுப் பினர் கே.பாலபாரதி தலைமையில் கண்டன போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த பேச்சுவார்த்தையில் மூன்றுமாத காலத்திற்குள் இந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றிக் கொள்வதாக அரசுத் தரப்பில் எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்கப்பட்டது. இருப்பினும் மூன்று மாதங்களுக்கு மேலாகியும் கடையை மாற்றாததால் ஜனவரி 18 புதன்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
இதற்காக சின்னமனூர் மார்க்கை யன்கோட்டை விலக்கிலிருந்து கண்டன கோஷங்களை எழுப்பியவாறு நகர் பொறுப் பாளர் எம்.மணிகண்டன் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.வெங்க டேசன், ஏரியா செயலாளர் கே.எஸ். ஆறுமுகம், மாவட்டக்குழு உறுப்பினர் கள் கே.கரண்குமார், என்.அம்சமணி, விவசாயத்தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எல்.ஆர்.சங்கரசுப்பு உள்ளிட்ட நிர்வாகிகள் டாஸ்மாக் கடையை நோக்கி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து தனியார் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.
இதனிடையே இப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த கே.பால பாரதி, கம்யூனிஸ்ட் கட்சியினரை வலுக் கட்டாயமாக கைது செய்த போலீசாரை கண்டித்து டாஸ்மாக் கடை அருகில் திண்டு க்கல் -குமுளி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டார். இந்த சாலை மறியலில் ஈடுபட்ட பாலபாரதியையும் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். காவல்துறையின் அராஜகத்தை கண்டித்து பாலபாரதி தலைமையிலான போராட்ட குழுவினர் காவல்துறை கொடுத்த உணவை புறக்கணித்தனர். மதுக்கடையை இடம் மாற்றும் வரை போராட்டம் தொடரும் என்றும் கே.பால பாரதி தெரிவித்தார். இந்நிலையில் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.