tamilnadu

img

உயர்கல்வித்துறை அமைச்சருக்கு சிபிஎம் தலைவர்கள் வாழ்த்து

தஞ்சாவூர், அக்.3 -  தமிழ்நாடு அரசின் உயர் கல்வித்துறை அமைச்சராக திருவிடைமருதூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கோவி.செழியன் நியமிக்கப்பட்டு, பதவியேற்றுள்ளார்.  இதையடுத்து அமைச்சர் கோவி.செழியன் தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திமுக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் ஆகியோரைச் சந்தித்து வருகிறார். இந்நிலையில் அக்டோபர் 3 வியாழக்கிழமையன்று தஞ்சாவூர் வருகை தந்த உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினரும், கந்தர்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.சின்னத்துரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் ஆகியோர் சந்தித்து,சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பி.செந்தில்குமார், என்.சரவணன், மாவட்டக்குழு உறுப்பினர் என்.குருசாமி, மாநகரச் செயலாளர் எம். வடிவேலன், புதுக்கோட்டை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ராமையன் ஆகியோர் உடனிருந்தனர்.